தமிழ்நாடு

வேலைவாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி : அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் மனு தள்ளுபடி !

வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

வேலைவாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி : அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் மனு தள்ளுபடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க மேலாளர் குணசீலன். இவர் அதிமுக முன்னாள் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜாவின் அண்ணன் மருமகன் ஆவார். இந்த சூழலில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் இவர், முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் மீதும் ராசிபுரம் காவல் நிலையத்தில் ரூ.76.50 லட்சம் பண மோசடி புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், சத்துணவு திட்டத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 15 பேர் தன்னிடம் ரூ.76.50 லட்சம் பணம் அளித்ததாகவும், அந்த தொகையை அமைச்சர் சரோஜாவிடம் வழங்கியதாகவும், ஆனால் அவர் வேலை எதுவும் வாங்கித் தராமல் காலத்தை இழுத்தடித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பணத்தையும் திரும்பி கொடுக்கவில்லை என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி : அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் மனு தள்ளுபடி !

இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினர் முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகிய இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றுள்ள சரோஜா, இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வேலைவாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி : அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் மனு தள்ளுபடி !

ஒரு பக்கம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சரோஜா மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை சார்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகிலன்ஆஜராகி, முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிரான புகாரில் போதுமான ஆதாரங்களும் சாட்சிகளும் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் 34 சாட்சிகள் இருப்பதோடு, உரிய ஆவணங்கள் உள்ளதாகவும், அவரது வீட்டுக்கே சென்று பணம் கொடுத்ததற்கான சாட்சிகளும் உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து வாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், மனுவை திரும்ப பெறுவதாக சரோஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories