தமிழ்நாடு

இந்தியாவிலே முதன்முறையாக 49 காவல்துறை அதிகாரிகள் நியமனம்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !

போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் படி இந்தியாவிலே முதன்முறையாக தமிழகத்தில் 49 காவல்துறை அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது.

இந்தியாவிலே முதன்முறையாக 49 காவல்துறை அதிகாரிகள் நியமனம்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த நாகூர் கனி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், கஞ்சா கடத்தியதாக தன் மீது 2018 ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு எனக்கு சொந்தமான ஜீப் வாகனம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் விசாரணை நீதிமன்றத்தில் உள்ள தனது வாகனத்தை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரனை செய்த நீதிபதி தமிழகத்தில் போதை பொருள் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எத்தனை வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, எத்தனை வாகனங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன, எத்தனை வாகனங்களை திரும்ப உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார். மேலும், தமிழ்நாட்டில் போதை ஒழிப்பு கமிட்டி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளரா என்றும் கேள்வி எழுப்பி இதற்கு தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி கே.கே ராமகிருஷ்ணன் முன் கடந்த வருடம் விசாரணைக்கு வந்த போது, தமிழ் நாடு அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.செந்தில்குமார் ஆஜராகி தமிழ்நாடு அரசு நீதிமன்ற உத்தரவின் படி கோதை பொருள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முறைப்படுத்த சிறப்பு அதிகாரி NIBCID மாவட்ட அளவில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தார்.

இந்தியாவிலே முதன்முறையாக 49 காவல்துறை அதிகாரிகள் நியமனம்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !

இதனை பதிவு செய்த நீதிபதி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட அதிகாரிகள் நியமனம் செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி செந்தில்குமார் ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்தியாவில் தமிழ்நாடு முதன்முறையாக மாநில அளவில் விசாரணை அதிகாரி மற்றும் மாவட்ட அளவில் கஞ்சா போதை பொருள் வழக்குகளை விசாரணை செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் 07 ADSP, 11 AC, 30 DSP ஆகிய 38 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது என்ற அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த காவல்துறை அதிகாரிகள் ஒரு காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் அதை கண்காணிப்பார்கள் தொடர்ந்து அந்த வழக்கு முடிந்து தண்டனை பெறுகிறதா? அல்லது விடுதலை பெறுகிறதா? என்பது வரை வழக்கை முழுமையாக கண்காணித்து மாநில அதிகாரிக்கு தகவல் கொடுப்பார்கள் அவர்களுக்கு போதிய பயிற்சியும் சுற்ற அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதனைப் படித்துப் பார்த்த நீதிபதி, தமிழ்நாடு அரக்கு பாராட்டு தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, "தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிக்கு நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. ஏனென்றால் உச்ச நீதிமன்றம் கடந்த 2013 ஆம் ஆண்டு இது போன்ற ஒரு உத்தரவை பிறப்பித்தும், வேறு எந்த மாநிலங்களில் இந்த உத்தரவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை தமிழகத்தில் முதல்முறையாக நடைமுறைப்படுத்தி உள்ளதற்காக அரசுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள்" எனத் தெரிவித்து, வழக்கை பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

banner

Related Stories

Related Stories