தமிழ்நாடு

முறைகேடு புகாரில் ஜாமின் பெற்ற துணைவேந்தரை சந்தித்த ஆளுநர் - சந்திப்பு குறித்து RTI மூலம் கேள்வி !

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை ஆளுநர் ரவி சந்தித்தது குறித்து RTI மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

முறைகேடு புகாரில் ஜாமின் பெற்ற துணைவேந்தரை சந்தித்த ஆளுநர் - சந்திப்பு குறித்து RTI மூலம் கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், தனியார் நிறுவனமான பூட்டர் பவுண்டேஷன் மற்றும் பூட்டர் பார்க் (PUTER Park) நிறுவனங்கள் மூலம் பயிற்சி கல்வி பாடத்திட்டம் வழங்குவது தொடர்பாகப் பல தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதன் மூலம் மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகார் எழுந்தது.அதன்பேரில், பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த டிசம்பர் 26ந் தேதி கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே பூட்டர் பவுண்டேஷன் செயல்பாடு மற்றும் அதில் நடைபெறும் பணப்பரிமாற்றம் தொடர்பாக துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு ஆதரவாளர்களான பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜெயராமன், சுப்பிரமணிய பாரதி, துணை பேராசிரியர்கள் நரேஷ் குமார், ஜெயக்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை காவல் நிலையம் வரவழைத்து காவல் உதவி ஆணையர் நிலவழகன் அண்மையில் விசாரணை மேற்கொண்டார்.

இந்த முறைகேடு தொடர்பாக போலிஸார் விசாரணை மற்றும் பெரியார் பல்கலைக்கழகத்தில் சோதனையிலும் நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முறைகேடு வழக்கில் செய்து செய்யப்பட்டுள்ள துணை வேந்தர் ஜெகநாதன் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சேலத்திற்கு வருகை தந்தார்.

முறைகேடு புகாரில் ஜாமின் பெற்ற துணைவேந்தரை சந்தித்த ஆளுநர் - சந்திப்பு குறித்து RTI மூலம் கேள்வி !

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராகக் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் பல்கலைக்கழகத்துக்கு சென்ற ஆளுநர் அதில் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தை நடத்தினார். பிறகு துணை வேந்தர் ஜெகநாதனிடம் தனியாக ஆளுநர் ஆர்.என்.ரவி பத்து நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு பல சந்தேகங்களை எழுப்பிய நிலையில், இந்த சந்திப்பு குறித்த விவரங்களை வெளியிடுமாறு வழக்கறிஞர் ஒருவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார்.

மூத்த வழக்கறிஞர் துரைசாமி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை ஆளுநர் ரவி சந்தித்தது குறித்து, ஆளுநர் மாளிகை பொது தகவல் அதிகாரிக்கு, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார்.

முறைகேடு புகாரில் ஜாமின் பெற்ற துணைவேந்தரை சந்தித்த ஆளுநர் - சந்திப்பு குறித்து RTI மூலம் கேள்வி !

அதில் ஜெகநாதன் ஆளுநர் ரவியின் நெருங்கிய நண்பரா? ஆளுநர் ரவி, பெரியார் பல்கலைக்கழகத்துக்கு சென்றது அலுவல் ரீதியிலானதா? தனிப்பட்ட முறையிலானதா? துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும், அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதும் ஆளுநருக்கு தெரியுமா? ஜெகநாதன் ஜாமினில் விடுவிக்கப்பட்ட பிறகு அவரிடம் ஆளுநர் எத்தனை முறை பேசியிருக்கிறார் அவர்களின் உரையாடல் என்ன? என கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும் தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்ற போது எவ்வளவு சொத்துக்கள் அவருக்கு இருந்தன? தற்போது எவ்வளவு சொத்துக்கள் உள்ளன? எனவும் கேட்டிருக்கிறார்.இதே போல சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் மூத்த வழக்கறிஞர் துரைசாமி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகளை எழுப்பி தகவல் கோரியிருக்கிறார். அந்த விண்ணப்பத்தில், ஆளுநர் ரவியும் ஜெகநாதனும் மோசடி வழக்கு குறித்து பேசினார்களா? மோசடியில் ஆளுநருக்கு பங்கு உள்ளதா? ஜெகநாதனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றுஆளுநர் எவரையேனும் நிர்பந்தித்தாரா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories