தமிழ்நாடு

2வது நாளாக முழுமையாக பேருந்துகள் இயக்கம் : அச்சமின்றியும் பாதுகாப்பாகவும் பயணிக்கும் மக்கள்!

தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் முழுமையாக பேருந்துகளைத் தமிழ்நாடு அரசு இயக்கி வருகிறது.

2வது நாளாக முழுமையாக பேருந்துகள் இயக்கம் : அச்சமின்றியும் பாதுகாப்பாகவும் பயணிக்கும் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

15வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில போக்குவரத்து சங்கங்கள் இன்றிலிருந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து பொதுமக்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் போக்குவரத்தைச் சீராக இயக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நேற்றிலிருந்தே சில போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் மக்கள் எவ்விதமான சிரமங்களைச் சந்திக்காத வகையில் நேற்று 98%க்கும் மேல் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டது.

இதனால் வேலைக்குச் செல்லக்கூடியவர்கள், வெளியூர் செல்பவர்கள் என அனைவரும் வழக்கம்போல் பேருந்துகளில் மகிழ்ச்சியாகப் பயணம் செய்தனர். குறிப்பாக வேலை நிறுத்தத்திற்கான அறிகுறியே இல்லாத வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

2வது நாளாக முழுமையாக பேருந்துகள் இயக்கம் : அச்சமின்றியும் பாதுகாப்பாகவும் பயணிக்கும் மக்கள்!

இந்நிலையில் இன்றும் 2வது நாளாகப் போராட்டம் தொடரும் நிலையில், பொது மக்கள் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக, முழுமையாகப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் 2வது நாளாக இன்றும் (10.01.2024) முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது.

எனவே, பயணிகள் எந்தவித அச்சமின்றி, பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது, மேலும், அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் முழுமையாகக் கண்காணித்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்" என தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories