தமிழ்நாடு

"உலக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடுதான்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் !

"உலக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடுதான்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்க சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றும், நாளையும் (7,8.01.2024) ஆகிய 2 நாட்களில் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் இந்த நிகழ்வில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், தமிழ்நாடு அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் இதில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் என மொத்தம் 35 நாடுகளில் இருந்தும் டாப் தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளது. இந்த மாநாட்டின் மூலம் ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்பதே இலக்கு என்று முதலமைச்சர் கூறியிருந்த நிலையில், இது அதற்கு புள்ளியாக அமையவுள்ளது.

தொடர்ந்து இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக பெருமிதமாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர், "கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே, 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடுதான்' என்று தமிழ்நாடு அங்கீகாரம் பெற்றிருக்கிறது.

"உலக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடுதான்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் !

இந்த நிலையை மேம்படுத்துகின்ற வகையிலேயும், மாநிலத்தின் முதலீடு ஈர்ப்புத் திறனை உலகுக்கு வெளிப்படுத்தவும், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறோம். நாங்கள் துறை வாரியாக மேற்கொண்ட முதலீட்டாளர்கள் மாநாட்டு சந்திப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்து சாதனைகளையும் படைத்திருக்கிறோம்.

உங்களையெல்லாம் காணும்போது, இந்த சாதனைகளையெல்லாம் விஞ்சக்கூடியதாக இந்த மாநாடு அமையப் போகிறது என்ற நம்பிக்கை பிறக்கிறது. தொழில்மயமாக்கல் வரலாற்றில், ஒரு மகத்தான அத்தியாயமாகவும் இந்த மாநாடு இருக்கப் போகின்றது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றவேண்டும் என்ற குறிக்கோளோடுதான், 2030-ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை, 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தவேண்டும் என்று ஒரு இலட்சிய இலக்கை நான் நிர்ணயித்திருக்கிறேன்.

உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, மற்றும் வேலைவாய்ப்பு மிகுந்த முதலீடுகளை ஈர்ப்பது என்ற இருமுனை அணுகுமுறையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். ஒரு மாநிலத்தில், தொழில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றால், அந்த மாநிலத்தின் ஆட்சி மேல் நல்லெண்ணம் இருக்கவேண்டும்! அங்கு சட்டம், ஒழுங்கு நல்ல முறையில் பேணப்பட்டு, அமைதியான சூழல் நிலவவேண்டும்! ஆட்சியாளர்கள் மேல் உயர்மதிப்பு இருக்கவேண்டும்!

"உலக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடுதான்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் !

அந்த மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்கவேண்டும். 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல், இந்த அம்சங்களெல்லாம் தமிழ்நாட்டில் இருப்பதால்தான், தொழில் துறையில் ஏராளமான முதலீடுகள் குவிகிறது! முதலீட்டாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று முன்கூட்டியே கணித்து, இன்றைய தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

வணிகம் புரிதலை எளிதாக்கி வருகிறோம். திறன்மிகு பணியாளர்களை உருவாக்கி வருகிறோம். நாளைய தொழில் மாற்றங்களைக் கணித்து வைத்திருக்கிறோம். தொழிலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடையே இணைப்பினை ஏற்படுத்தி வருகிறோம். தொழிற்சாலைகளுக்கேற்ற தொழிலாளர்களை தயார்படுத்தி வருகிறோம். ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வருகிறோம். இளைஞர்களின் திறனுக்கேற்ற வேலைகளை உறுதி செய்து தருகிறோம். திறமையான இளைய சக்தியை உருவாக்கித் தருவதை நோக்கமாகக் கொண்டது, இன்றைய தமிழ்நாடு அரசு.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தமிழ்நாட்டில் இருந்துதான் உருவானார்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் அடியொற்றி, பெண்களுக்குச் சமூக, கல்வி, பொருளாதார, அரசியல்ரீதியாக அதிகாரமளிக்கின்ற திட்டங்கள், இந்தியாவுக்கே முன்னோடியாக செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

பெண்களுக்கு பொருளாதார விடுதலை என்பது இந்த திராவிட மாடல் அரசின் முழக்கம்! அதனால்தான், 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்', 'புதுமைப் பெண் திட்டம்', 'விடியல் பயணம்', 'தோழி விடுதி' என்று அறிவித்து, பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்." என்றார்.

banner

Related Stories

Related Stories