தமிழ்நாடு

எண்ணூரில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு : அதிகாரிகள் எடுத்த துரித நடவடிக்கை!

எண்ணூரில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் திடீரென வெளியேறிய வாயு கசிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எண்ணூரில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு :  அதிகாரிகள் எடுத்த துரித நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோரமண்டல் கெமிக்கல் தொழிற்சாலை இயங்கி வருகிறது இந்த தொழிற்சாலைக்கு கடலில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் பதிக்கப்பட்டுள்ள குழாய் மூலம் கப்பலில் கொண்டு வரும் அம்மோனியா கேஸ் அனுப்பப்படுகிறது அந்த அமோனியம் கேஸ் வாய்வு தொழிற்சாலையில் உள்ள 15,000 டன் தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு கெமிக்கல் உரம் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடலில் உள்ள குழாயில் திடீர் என கசிவு ஏற்பட்டு சுமார் 20 நிமிடம் அமோனியா கேஸ் வாய்வு கடலில் பரவி காற்றின் வேகத்தால் அருகில் உள்ள பெரிய குப்பம் சின்ன குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் அமோனியா கேஸ் பரவியது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு கண் எரிச்சல் மூச்சுத் திணறல் ஏற்பட்டது சில பேர் மயக்கம் அடைந்தனர்

இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் உடனடியாக தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்காக முற்பட்டனர். மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்து வெளியேறி சாலைகள் தஞ்சம் அடைந்தனர்.

எண்ணூரில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு :  அதிகாரிகள் எடுத்த துரித நடவடிக்கை!

இதுபற்றி அறிந்த உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி மாநகர காவல் துறை இணை ஆணையர் , சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்வதற்காக 20க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் அருகில் உள்ள தொழிற்சாலைகள் உள்ள பேருந்துகளை வரவழைக்கப்பட்டு பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி தங்க வைத்தனர்.

மேலும் கண் எரிச்சல் மூச்சுத் திணறல் காரணமாக மயக்கம் அடைந்த 30 பேரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது

அதனைத் தொடர்ந்து வாய்வு கசிவு ஏற்பட்ட கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில் வாய்வு கசிவை ஊழியர்கள் சரி செய்தனர். இந்த சம்பவத்தை குறித்து ஆவடி மாவட்ட இணை ஆணையர் விஜயகுமார் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் எண்ணூர் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் தங்குவதற்காக தனியார் திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உணவு மற்றும் மருத்துவம் அளிப்பதற்காக தயார் நிலையில் உள்ளனர். மேலும் ஒரு நாளுக்குள் பாதிப்பு குறித்து முழுமையாக கண்டறிந்து அதனை சரிசெய்ய நிறுவனத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் இந்த நிறுவனம் அரசிடம் அனுமதி பெற்ற பின் மட்டுமே இறக்குமதி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories