தமிழ்நாடு

“பாசிஸ்ட்டுகள் ஏற்படுத்தும் செயற்கைப் பேரிடரிலிருந்து நாட்டை மீட்போம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !

பாசிஸ்ட்டுகள் ஏற்படுத்தி வரும் செயற்கைப் பேரிடரிலிருந்து நாட்டை மீட்க டிசம்பர் 24 அன்று சேலத்தில் கூடுவோம் என இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“பாசிஸ்ட்டுகள் ஏற்படுத்தும் செயற்கைப் பேரிடரிலிருந்து நாட்டை மீட்போம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதைய இயற்கைப் பேரிடரிலிருந்து மக்களை மீட்போம் - பாசிஸ்ட்டுகள் ஏற்படுத்தி வரும் செயற்கைப் பேரிடரிலிருந்து நாட்டை மீட்க டிசம்பர் 24 அன்று சேலத்தில் கூடுவோம் என இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

“மிக்ஜாம் புயல் கனமழை ஏற்படுத்திய வரலாறு காணாத பேரிடரால் சென்னை காஞ்சிபுரம் - திருவள்ளூர் - செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் - இளைஞர் அணியினர் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் களத்தில் இறங்கி மக்களுக்கான நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர்.

“பாசிஸ்ட்டுகள் ஏற்படுத்தும் செயற்கைப் பேரிடரிலிருந்து நாட்டை மீட்போம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !

கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி நள்ளிரவு முதல் தற்போது வரை நானும் தொடர்ந்து களத்தில் நின்று வெள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கி வருகிறேன்.

குறை கூறுவதற்காக மட்டுமே தலையை வெளியே காட்டும் எதிர்க்கட்சிகளுக்கு மத்தியில், மக்களுடன் நிற்பதும் - அவர்களைப் பேரிடரிலிருந்து மீட்பதுமே நமது தலையாயப் பொறுப்பு. ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுக்குச் செவிமடுத்தும் - வன்மத்துடன் வருகின்ற விமர்சனங்களை எதிர்கொண்டும் மக்களுக்கான உதவிகளை, நம் கழகத்தினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

“பாசிஸ்ட்டுகள் ஏற்படுத்தும் செயற்கைப் பேரிடரிலிருந்து நாட்டை மீட்போம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !

இந்த மாபெரும் மீட்பு நிவாரணப் பணிகளின் காரணத்தால், சேலத்தில் வருகிற 17-ஆம் தேதி நடைபெறவிருந்த 'மாநில உரிமை மீட்பு' முழக்கமான நம் இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை, டிசம்பர் 24-ஆம் தேதி நடத்துவது, என்று தலைமைக் கழகம் அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்புக்கேற்ப இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கான பணிகளை ஒருங்கிணைக்க இளைஞர் அணியின் மாநில - மாவட்ட ஒன்றிய - நகர மாவட்டச் செயலாளர்கள் பகுதி - பேரூர் நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

இயற்கைப் பேரிடரிலிருந்து நம் மக்களை இப்போது மீட்போம். 10 ஆண்டு காலமாக பாசிஸ்ட்டுகள் ஏற்படுத்தி வரும் செயற்கைப் பேரிடரிலிருந்து நாட்டை மீட்க, டிசம்பர் 24 அன்று சேலத்தில் கூடுவோம்; இளைஞர் அணி மாநாட்டை வெற்றி பெறச் செய்வோம்.”

banner

Related Stories

Related Stories