தமிழ்நாடு

BJP- Bribery Janatha Partyயா? : சரமாரியாக கேள்வி எழுப்பும் அமைச்சர் மனோ தங்கராஜ்!

BJP -Bribery Janatha Party யா? என கடுமையாக அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.

BJP- Bribery Janatha Partyயா? : சரமாரியாக கேள்வி எழுப்பும் அமைச்சர் மனோ தங்கராஜ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தனது சொத்துக்குவிப்பு வழக்கை முடித்துத் தருவதாகக் கூறி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் தன்னிடம் ரூ.3 கோடி லஞ்சம் கேட்டதாகவும், அதனை தர மறுக்கவே இறுதியில் ரூ.51 கோடி வரை பேரம் பேசி தர வேண்டும் என்றும் மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில் முதற்கட்டமாக ரூ.20 லட்சம் பணத்தை முன்பணமாக வாங்கியுள்ளதாகவும், பின்னர் இரண்டாவது முறையாக ரூ.31 லட்சம் லஞ்சமாக தரவேண்டும் என்று தன்னை தொடர்ந்து மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

மருத்துவர் புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட போலீசார், இதற்காக ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மருத்துவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அங்கித் திவாரி வாங்கிய உடனே பணத்துடன் காரில் தப்பியோட முயன்றுள்ளார்.

அப்போது அவரை தொடர்ந்து விரட்டி சென்று திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து மடக்கி பிடித்த போலீசார் அமலாக்கத்துறை அதிகாரியை அதிரடியாக கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்ட்ரன். மேலும் அவருக்கு சொந்தமாக வீடு உள்ளிட்டவைகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

BJP- Bribery Janatha Partyயா? : சரமாரியாக கேள்வி எழுப்பும் அமைச்சர் மனோ தங்கராஜ்!

தொடர்ந்து அவரிடம் 15 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி பல்வேறு தொழிலதிபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் லஞ்சப்பணம் பெற்று, அதனை சக அதிகாரிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன. மேலும் இதில் மதுரை, சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து லட்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஒன்றிய பாஜக அரசு, தனது அரசியல் எதிரிகளை பழிவாங்க பயன்படுத்தும் கருவியான அமலாக்கத்துறையில் எந்த அளவுக்கு லஞ்சம் ஊழல் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அமலாக்கத்துறை அதிகாரியின் கைது வெளிச்சம் போட்டு காட்டுகிறது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்தள்ளார்.

அதேபோல் அமைச்சர் மனோ தங்கராஜ், BJP -Bribery Janatha Party யா? என ஒன்றிய அரசை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "ED அலுவலர்கள் லஞ்சம், உள்துறை அலுவலகம் ஊழல், சி.ஏ.ஜி. அறிக்கையில் 7.5 லட்சம் கோடி இமாலய ஊழல்.. என்ன இது? BJP - பாரதீய ஜனதா பார்டியா? Bribery Janatha Party யா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories