தமிழ்நாடு

மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது நடந்த துயரம்: மகன்கள் கண்முன்னே தாய் பரிதாப பலி!

சென்னை அருகே சாலை விபத்தில் மகன்கள் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது நடந்த துயரம்: மகன்கள் கண்முன்னே தாய் பரிதாப பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் சேவியர். இவர் ஓமன் நாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா. இந்த தம்பதிக்கு ஜஸ்பர் ரீகன், அக்வின் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாத்திமாகவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அம்பத்தூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு மகன் ஜஸ்பர் ரீகன் அழைத்து சென்றுள்ளார்.. உடன் சிறுவன் அக்வினும் சென்றுள்ளனார்.

பின்னர் மருத்துவரைப் பார்த்து விட்டு மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஆவடி அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி மூன்று பேரும் கீழே விழுந்தனர். அப்போது லாரி சக்கரத்தில் சிக்கி தாய் பாத்திமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய் இறந்ததைப் பார்த்து இரண்டு மகன்களும் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது. இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories