தமிழ்நாடு

செப்.15-ல் கலைஞர் 100 ‘வினாடி வினா’ போட்டி : முதல் பரிசு 10 இலட்சம்.. கனிமொழி MP அசத்தல் !

கலைஞர் 100 வினாடி விடை, 18 வயதிற்குப்பட்டவர்களுக்கு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என இரு பிரிவினருக்கும் முதல் பரிசு தலா 10 இலட்சம் அறிவிக்கப்பட்டுள்து.

செப்.15-ல் கலைஞர் 100 ‘வினாடி வினா’ போட்டி : முதல் பரிசு 10 இலட்சம்.. கனிமொழி MP அசத்தல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி முன்னெடுப்பில், திமுக மகளிரணி சார்பில் தமிழ்நாட்டின் மாபெரும் வினாடி வினா போட்டி பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 தேதி அன்று துவங்குகிறது. தமிழ்நாட்டின் வரலாறு, திராவிட அரசியலைப் பற்றி கேள்விகள் கேட்கப்படும். kalaignar100.co.in என்ற இணையதளத்தில் உங்களைப் பதிவு செய்து கொண்டு, இணையவழிப் போட்டிகளில் பங்கேற்கலாம்.

திராவிட இயக்க வரலாற்றையும் கொள்கைகளையும் இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் ஒரு மாபெரும் முன்னெடுப்பு. வினாடி வினா போட்டிக்குத் தயாராகப் படிக்க வேண்டிய புத்தகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சுமார் 10 ஆயிரம் கேள்விகளைக் கொண்ட இந்த வினாடி வினா போட்டியில் 18 வயதிற்குப்பட்டவர்களுக்கு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு (பொதுப்பிரிவு) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாகப் போட்டி நடைபெறுகிறது. முதலாவதாக மாவட்ட அளவிலான சுற்று. இரண்டாவதாக மண்டல அளவிலான சுற்று. மூன்றாவதாக அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்று. kalaignar100.co.in இணையத்தளத்தில் விவரங்களைப் பதிவு செய்வதன் மூலம் இப்போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம்.

செப்.15-ல் கலைஞர் 100 ‘வினாடி வினா’ போட்டி : முதல் பரிசு 10 இலட்சம்.. கனிமொழி MP அசத்தல் !

முதல் 40 நாட்கள் இணையவழி சுற்றுகளாக நடைபெறும், மொத்தம் 100 வினாடிகளுக்கு 50 கேள்விகள் வரை கேட்கப்படும். மாவட்ட அளவிலான தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவர்.

இணையவழி சுற்றில் வெற்றி பெறுபவர்கள், மண்டல அளவிலான இரண்டாவது நேர்முக சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள். மண்டல அளவில் நேரடி குழு போட்டியாக நடைபெறும். இதில் வெற்றிபெறும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவர். சென்னையில் நடக்கவிருக்கும் அரை இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி ஒருங்கிணைப்பில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இறுதிச்சுற்று பிரமாண்டமாகச் சென்னையில் நடைபெறும். இறுதிப் போட்டியில் 18 வயதிற்குப்பட்டவர்களுக்கு (12 அணிகளும்), 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு (12 அணிகளும்) மொத்தம் 24 அணிகள் பங்குபெறுவார்கள்.

கலைஞர் 100 வினாடி வினா, 18 வயதிற்குப்பட்டவர்களுக்கு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என இரு பிரிவினருக்கும் முதல் பரிசு தலா 10 இலட்சம், இரண்டாம் பரிசு 6 இலட்சம், மூன்றாம் பரிசு 3 இலட்சம். 38 லட்சத்திற்கு மேலான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்.15-ல் கலைஞர் 100 ‘வினாடி வினா’ போட்டி : முதல் பரிசு 10 இலட்சம்.. கனிமொழி MP அசத்தல் !

முன்னதாக, கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி 'கலைஞர் 100' வினாடி-வினா போட்டிக்கு அனைவரும் தயாராக வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்பாக அவர் டிவிட்டர் "X" பக்கத்தில் வெளியிட்ட காணொளிப் பதிவில் அறிவித்தார்.

தமிழினத்தின் அறிவொளியாக்கத் தன்னிகரில்லா ஆளுமையாக வளர்ந்து வழிகாட்டிய கலைஞரின் நூற்றாண்டில் திராவிட இயக்கத்தையும், தமிழ்நாடு எனும் பெரு நிலத்தையும், தமிழ் இன வரலாற்றையும் அனைவரும் அறிந்திடும் வண்ணம் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி முன்னெடுப்பில் 'கலைஞர் 100' வினாடி-வினா போட்டி மகளிர் அணி சார்பில் நடைபெற இருக்கிறது.

நமது முந்தைய களப் போராட்டங்களை; அரசியல் புரட்சிகளை; அதற்கு வித்திட்ட நமது முன்னோர்களை; நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறவும் இந்த வினாடி-வினா போட்டி பெரும் வாய்ப்பாக அமையும். பத்தாயிரம் கேள்விகளோடு 18 வயதிற்குப்பட்டவர்களுக்கு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாகப் போட்டி நடைபெறுகிறது.

இந்த வினாடி வினா போட்டியில் எல்லோரும் கலந்துகொண்டு தங்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தலாம், kalaignar100.co.in என்ற இணையதளத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று இணையவழி போட்டிகள் தொடங்க இருக்கிறது. வரலாற்றின் தனிப்பெரும் மக்கள் இயக்கத்தை இணையில்லா கலைஞர் நூற்றாண்டில் கொண்டாடுவோம் வாருங்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories