தமிழ்நாடு

”காழ்புணர்ச்சி காரணமாக மக்களிடத்தில் பீதியை கிளப்பும் பழனிசாமி".. ஆதாரத்துடன் பட்டியலிட்ட அமைச்சர் மா.சு!

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிரிக்கட்சித் தலைவர் போல் செயல்படுகிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.

”காழ்புணர்ச்சி காரணமாக மக்களிடத்தில் பீதியை கிளப்பும் பழனிசாமி".. ஆதாரத்துடன் பட்டியலிட்ட அமைச்சர் மா.சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அதிமுக ஆட்சியில் அரைத்த மாவையே அரைத்தது போல் இல்லாமல் மருத்துவத் துறையில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியை கண்டு காழ்புணர்ச்சி கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமான பதிலளித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எதிரிக்கட்சித் தலைவர் போல் செயல்படுகிறார். 07.05.2021 அன்று திமுக அரசு பதவியேற்கும் போது உச்சத்திலிருந்த கொரோனா எனும் கொள்ளை நோயை விரட்டி அடித்து கொரோனா எண்ணிக்கையை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்து சாதனை புரிந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் “வணக்கத்திற்குரிய தளபதியார்” அவர்களின் ஆட்சியின் மீது கொண்டுள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக பீதியை கிளப்பும் வகையில் மக்கள் விரோதப் போக்கை கையாளுகிறார். டெங்கு, மலோரியா நோயினால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதியுறுகிறார்கள் என்று கூறுகிறார்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, 2019 ஆம் ஆண்டு மட்டும் டெங்கு பாதிப்பு 8,527 ஆக இருந்தது. அதேபோல் 2019 ஆம் ஆண்டு மலேரியாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,088, இந்த ஆண்டு மலேரியாவினால் 30.07.2023 வரை 164 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் 2019 ஆம் ஆண்டு சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 681, இந்த ஆண்டு 30.07.2023 வரை 45 பேர் மட்டுமே சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மக்களை காக்கும் பணியை செவ்வனே செய்து வரும் காரணத்தினால் தான் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா பாதிப்பு குறைந்து, கட்டுக்குள் இருக்கிறது.

அதிமுக ஆட்சிகாலத்தில் மருத்துவத்துறை எந்த ஒரு புதிய திட்டங்களையும் கொண்டு வராமல் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் ஆட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம், இதயம் காப்போம் திட்டம், சிறுநீரக பாதுகாப்பு திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் என பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் மருத்துவப் பயன் பெற்று வருகின்றனர்.

”காழ்புணர்ச்சி காரணமாக மக்களிடத்தில் பீதியை கிளப்பும் பழனிசாமி".. ஆதாரத்துடன் பட்டியலிட்ட அமைச்சர் மா.சு!

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் கடந்த 10 ஆண்டுகள் அதிமுக அரசு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் விராலிமலை தொகுதி அன்னவாசல் அரசு மருத்துவமனை வளாகத்தில் சரியாக பராமரிப்பின்றி அவதியுற்ற 50 மனநல பாதிக்கப்பட்ட சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களை காப்பாற்றுவதற்கு .பழனிசாமியும் வழிகாட்டவில்லை, விஜயபாஸ்கர் அவர்களும் அவர் தொகுதியையே கடந்த 10 ஆண்டுகளாக பார்க்கவில்லை என்பதை தமிழ்நாடு மக்கள் உணராமல் இல்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் 7 முதல் 10 முறைக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்க்காத மருத்துவமனையில்லை, ஆய்வு செய்யாத ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை என்ற நிலையில் தமிழ்நாடு மருத்துவத்துறையில் தன்னிறைவுப்பெற்ற மாநிலமாக திகழ்வதை பொறுத்து கொள்ள முடியாத .பழனிசாமி அவர்கள் வாய்புளித்தது மாங்காய் புளித்தது என்பது போல் மருந்து மாத்திரை பற்றாக்குறை என்று உளறுகிறார்.

இதே போல் 16.10.2022 அன்று சேலம் மாவட்டத்தில் மருந்துகள் பற்றாக்குறை என்று உளறினார். அவர் உளறிய சில மணி நேரங்களிலே அவர் ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள TNMSC மருந்து கிடங்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி ஆய்வு மேற்கொண்டு அனைத்து மருந்துகளும் இருப்பில் உள்ளதை நிரூபித்தோம், பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தெரிவித்தோம்.

வேண்டுமென்றால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை வர சொல்லுங்கள், அவருடனே கூட்டு ஆய்வு மேற்கொள்வோம் என்று கூறியதற்கு பதில் சொல்லாத எதிர்கட்சித் தலைவர் சொந்த ஊரில் நடைபெற்றதை மறந்துவிட்டு மருந்துகள் இல்லை என்றும் TNMSC என்று ஒன்று உள்ளதோ என்று வினவுகிறார்

”காழ்புணர்ச்சி காரணமாக மக்களிடத்தில் பீதியை கிளப்பும் பழனிசாமி".. ஆதாரத்துடன் பட்டியலிட்ட அமைச்சர் மா.சு!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதிநிலை அறிக்கையில் இதுவரை மருந்து கிடங்குகள் அமையப்பெறாத மாவட்டங்களான தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 5 இடங்களில் புதிய மருந்து கிடங்குகள் ரூ.30 கோடி செலவில் அமைக்கப்பெற்று பயன்பாட்டிற்கு வரும் தருவாயில் உள்ளது.

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் உள்ள மருந்துகள் இருப்பு எண்ணிக்கை பற்றி உதாரணத்திற்கு சில கூறுகிறேன். காய்ச்சல் மேலாண்மை மருந்துகளை பொறுத்தவரை, Paracetamol Tab 500 MG இருப்புகளின் எண்ணிக்கை 24.10 கோடி, 5.9 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது.

Diclofenac Sodium Inj IP 25 MG இருப்புகளின் எண்ணிக்கை 24.48 இலட்சம், 4.6 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது.Paracetamol Tab 650 MG இருப்புகளின் எண்ணிக்கை 2.21 கோடி, 6.7 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது.

தொற்றா நோய்களுக்கான ஆன்டிபயாடிக் மருந்துகளை பொறுத்தவரை, Metronidazole Tab IP 200 MG இருப்புகளின் எண்ணிக்கை 1.66 கோடி, 2.4 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது.

Amoxycillin Cap IP 250 MG இருப்புகளின் எண்ணிக்கை 14.05 கோடி, 5.8 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது.Doxycycline CAP IP 100 MG இருப்புகளின் எண்ணிக்கை 2.24 கோடி, 6.8 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது.

Erythromycin Stearate TAB IP 250 MG இருப்புகளின் எண்ணிக்கை 58.29 இலட்சம், 4.8 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது. ஆக 31.07.2023 வரை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மருந்து கிடங்குகளில் உள்ள மருந்துகளின் மொத்த மதிப்பு ரூ.170.82 கோடி (ரூ.170,82,98,756/-) ஆகும்.

இது பற்றியெல்லாம் அறியாது TNMSC என்று உள்ளதா என்று கேட்பதற்கு காரணம் அரசியல், தேர்தல் தோல்வி பயமாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மக்களை கேடயமாக இருந்து காக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் தேவையில்லை.

banner

Related Stories

Related Stories