தமிழ்நாடு

ரெடியா இருங்க.. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் முகாமை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்: எங்கு? எப்போது?

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று தொடங்கி வைக்கிறார்.

ரெடியா இருங்க.. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் முகாமை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்: எங்கு? எப்போது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகைக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த திட்டமானது அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' பயன்பெறும் வகையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்மையில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

ரெடியா இருங்க.. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் முகாமை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்: எங்கு? எப்போது?

இதையடுத்து இதற்கான விண்ணப்பங்களும் வெளியிடப்பட்டு பயனாளிகளின் விவரங்களை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட மாவட்ட நிர்வாகங்களை முடக்கிவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. மேலும் இதற்கு என்று சிறப்பு முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை வரும் திங்கட்கிழமை (24-07-2023) தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:-

மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலாக அமையவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன. தகுதி வாய்ந்த மகளிர் ஒருவர்கூட விடுபடாமல் இந்தத் திட்டம் போய்ச் சேர வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.

தமிழ்நாட்டு மகளிரின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் 1989-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அதே தருமபுரி மண்ணில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை வரும் திங்கட்கிழமை (24-07-2023) தொடங்கி வைக்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களை மாண்புமிகு அமைச்சர்கள் அனைவரும் சென்று பார்வையிட வேண்டும் என இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளேன்.

கலைஞர்100-இல் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், ஒரு தலைமுறையையே மாற்றக் கூடிய திட்டம் மட்டுமல்ல; பல தலைமுறைகளைத் தாண்டியும் பயனளிக்கக் கூடிய திட்டமாக விளங்கும் என எண்ணித் துணிகிறேன். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories