தமிழ்நாடு

”தமிழ்நாட்டில் பா.ஜ.கவால் ஒரு MP சீட்கூட ஜெயிக்க முடியாது”.. தயாநிதி மாறன் MP உறுதி!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.கவால் ஒரு சீட்கூட வெல்ல முடியாது என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

”தமிழ்நாட்டில் பா.ஜ.கவால் ஒரு MP சீட்கூட ஜெயிக்க முடியாது”.. தயாநிதி மாறன் MP உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை செளகார்பேட்டை மின்ட் சாலை முதல் என்.எஸ்.சி.போஸ் சாலை வரையிலும் பிரகாசம் சாலை,டேவிட்சன் தெரு,உம்பர்சன் தெரு ஆகிய சாலைகளில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 12.52 கோடி மதிப்பீட்டில் 2459 மீ நீளத்திற்குத் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதில் அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி சென்னையில் மழை பெய்தால் எந்த சாலையிலும் தண்ணீர் தேங்கக் கூடாது என்ற அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சென்னையில் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

”தமிழ்நாட்டில் பா.ஜ.கவால் ஒரு MP சீட்கூட ஜெயிக்க முடியாது”.. தயாநிதி மாறன் MP உறுதி!

இதன் காரணமாகச் சென்னையில் எங்குமே மழை நீர் தேங்காமல் இருக்கும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் மழை நீர் கால்வாய் பணிகள் இன்னும் முடியாமல் உள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிவடையும்.

தற்போது மின்ட் தெரு, பிரகாசம் சாலை ஆகிய இடங்களில் மழை நீரை வெளியேற்றக் கால்வாய்கள் அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த பணி செப்டம்பர் 15க்குள் முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.இந்த பணி முடிந்தால் துறைமுகம் பகுதி மக்கள் முழுமையாகப் பயனடைவார்கள்.

இந்தியா முழுவதும் பா.ஜ.க எதிர்ப்பு அலைதான் இருக்கிறது. விலை உயர்வால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.2024 தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது. அதேபோல் தமிழ்நாட்டில் பா.ஜ.கவால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட வெற்றி பெற முடியாது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories