தமிழ்நாடு

பணம் வராததால் ஆத்திரம்.. ATM எந்திரத்தைக் கோடாரியால் அடித்து நொறுக்கிய நபர்!

வேலூரில் ATM எந்திரத்தைக் கோடாரியால் அடித்து நொறுக்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

பணம் வராததால் ஆத்திரம்.. ATM எந்திரத்தைக் கோடாரியால் அடித்து நொறுக்கிய நபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலூர் மாவட்டம், ஊசூர் பகுதியில் இண்டி கேஸ் ATM உள்ளது. இந்த ஏடிஎம்மிற்கு இதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் பணம் எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது ஏந்திரத்திலிருந்து பணம் வரவில்லை.

மேலும் பலமுறை முயற்சி செய்து பார்த்துள்ளார். இருந்தும் பணம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் வீட்டிலிருந்து கோடாரியை எடுத்து ATM ஆம் மையத்திற்கு வந்துள்ளார்.

பணம் வராததால் ஆத்திரம்.. ATM எந்திரத்தைக் கோடாரியால் அடித்து நொறுக்கிய நபர்!

பின்னர் ATM ஏந்திரத்தைக் கோடாரியால் அடித்து நொறுக்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு உடனே வந்த போலிஸார் கந்தசாமியை மடக்கிப் பிடித்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பணம் வராததால் ஏடிஎம் ஏந்திரத்தை அடித்து நொறுக்கியதாகக் கூறினார். மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories