தமிழ்நாடு

”அடிப்படை அறிவு கூட இல்லை”.. வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!

வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

”அடிப்படை அறிவு கூட இல்லை”.. வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்து மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். குறிப்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் வேண்டும் என்றே இழுத்தடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது, ஒரு ஆளுநராக இருந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளில் தனது சனாதன கருத்துக்களைப் பேசி வருகிறார்.

”அடிப்படை அறிவு கூட இல்லை”.. வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!

நேற்று கூட ஆயிரம் வருடம் சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என ஆளுநர் பேசியுள்ளார். இவரின் பேச்சு தொடர்ப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆளுநருக்கு அடிப்படை அறிவு கூட இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறியுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, "சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், “தா்ம ரட்சராகப்“ புதிய அவதாரம் மேற்கொண்டு இருக்கிறார்.

”அடிப்படை அறிவு கூட இல்லை”.. வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!

தமிழ்ப் பண்பாடும் - விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன. ஒன்றிய அரசின் “தனிப்பெருங் கருணை“ ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையைச் சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories