தமிழ்நாடு

பேரம் பேசிக்கொண்டே தங்க நகைகளை தவறவிட்ட 63 வயது மூதாட்டி.. மீட்டுக்கொடுத்த போலிசாருக்கு குவியும் பாராட்டு

பேரம் பேசிக்கொண்டே 15 சவரன் தங்க நகைகளை ஆட்டோவில் தவறவிட்ட 63 வயது மூதாட்டியின் நகைகளை இராயபுரம் போலிசார் உடனடியாக மீட்டுக்கொடுத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

பேரம் பேசிக்கொண்டே தங்க நகைகளை தவறவிட்ட 63 வயது மூதாட்டி.. மீட்டுக்கொடுத்த போலிசாருக்கு குவியும் பாராட்டு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சபுராபீ. 63 வயது மூதாட்டியான இவர், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோட்டில் ஆடைகள் வாங்க வந்துள்ளார். ஆடைகள் வாங்கிவிட்டு மீண்டும் திருவல்லிக்கேணி பகுதிக்கு ஆட்டோவில் செல்ல எண்ணியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற ஒவ்வொரு ஆட்டோவையும் மடக்கி கேட்டுள்ளார். அப்போது அவர்களில் சிலர் அதிக தொகை கூறியதால், இந்த மூதாட்டி வேண்டாம் என்று கூறியுள்ளார்.

பேரம் பேசிக்கொண்டே தங்க நகைகளை தவறவிட்ட 63 வயது மூதாட்டி.. மீட்டுக்கொடுத்த போலிசாருக்கு குவியும் பாராட்டு

அதே போல் மற்றொரு ஆட்டோவை மடக்கி இதேபோல் கேட்டுள்ளார். அப்போது தனது கையில் இருந்த கட்டை பைகளை ஆட்டோவிற்குள் வைத்து பேரம் பேசியுள்ளார். ஆனால் ஆட்டோ ஓட்டுநர் அதிக தொகை கூறியதால், இந்த மூதாட்டியும் அந்த ஆட்டோவையும் வேண்டாம் என்று கூறியுள்ளார். இவ்வாறாக அடுத்த ஆட்டோவை பேரம் பேசும் போதுதான், தான் நகை, பணம் மற்றும் ஏடிஎம் கார்டு போன்றவைகளை வைத்திருந்த கட்டை பையை ஓர் ஆட்டோவில் மறந்து வைத்திருந்தது நினைவிற்கு வந்தது.

பேரம் பேசிக்கொண்டே தங்க நகைகளை தவறவிட்ட 63 வயது மூதாட்டி.. மீட்டுக்கொடுத்த போலிசாருக்கு குவியும் பாராட்டு

இதையடுத்து அவர் கத்தி கூச்சலிடவே, அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அருகில் இருந்த இராயபுரம் காவல் நிலையத்திற்கு முதாட்டியை அழைத்து சென்றுள்ளார். அங்கே இதுகுறித்து மூதாட்டி புகார் தெரிவிக்கவே, உடனடியாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அதில் மூதாட்டி கட்டைப்பையை வைத்திருந்த ஆட்டோவின் எண் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

பேரம் பேசிக்கொண்டே தங்க நகைகளை தவறவிட்ட 63 வயது மூதாட்டி.. மீட்டுக்கொடுத்த போலிசாருக்கு குவியும் பாராட்டு

இதைத்தொடர்ந்து ஆட்டோவின் பதிவெண்ணை கொண்டு அது மணலியில் வசித்து வரும் கிஷோர் என்பவரின் ஆட்டோ என தெரியவந்தது. பின்னர் தொலைபேசி வாயிலாக கிஷோரை தொடர்பு கொண்ட போலிசார், கிஷோர் அளித்த விலாசத்திற்கு சென்று ஆட்டோவை பார்த்த போது சபுராபீ வைத்த இடத்திலேயே அந்த பை இருந்ததும், அந்த பையை ஆட்டோ ஓட்டுநர் கவனிக்காமல் இருந்ததும் தெரியவந்தது.

பேரம் பேசிக்கொண்டே தங்க நகைகளை தவறவிட்ட 63 வயது மூதாட்டி.. மீட்டுக்கொடுத்த போலிசாருக்கு குவியும் பாராட்டு

பின்னர் அதில் இருந்த 15 சவரன் நகை மற்றும் 1500 ருபாய் பணம் ஏடிஎம் கார்டு போன்றவற்றை போலிசார் மீட்டு காவல் நிலையத்திற்கு சபராபீயை அழைத்து அவரிடம் கொடுத்தனர். மேலும் காவல் துறையினர் தொடர்பு கொண்டதும் சரியான விலாசத்தை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரையும் போலிசார் பாராட்டினர். தொடர்ந்து அந்த மூதாட்டியும் போலிசார் மற்றும் ஆட்டோ ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்தார்.

பேரம் பேசிக்கொண்டே 15 சவரன் தங்க நகைகளை ஆட்டோவில் தவறவிட்ட 63 வயது மூதாட்டியின் நகைகளை இராயபுரம் போலிசார் உடனடியாக மீட்டுக்கொடுத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories