தமிழ்நாடு

ஆருத்ரா மோசடி.. அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கூறி பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகி!

பாஜகவின் ஐடி விங்கில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகியதை தொடர்ந்து, ஆருத்ரா மோசடி வழக்கை குறிப்பிட்டு பாஜகவில் இருந்து பொருளாதார பிரிவு செயலாளர் விலகியுள்ளார்.

ஆருத்ரா மோசடி.. அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கூறி பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் அரங்கேற்றப்படும் மட்டமான அரசியலை சகித்துக்கொள்ள முடியாத நிலை இன்னும் அதிகரித்தே வருகிறது. பா.ஜ.கவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பல மூத்த நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்களும் வெளிச்சத்திற்கு வந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.

கே.டி.ராகவன் தொடங்கி, திருச்சி சூர்யா வரை பா.ஜ.கவின் முக்கிய புள்ளிகள் மீது சொந்தக் கட்சி பெண் நிர்வாகிகளே புகார் அளித்துள்ள செய்திகள் எல்லாம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்து பா.ஜ.க அசிங்கப்பட்டு கிடக்கிறது. இது எல்லாம் ஒரு கட்சியா? என்று பெண்களே பேசும் அளவிற்குத் தமிழ்நாட்டு பா.ஜ.க உள்ளது.

ஆருத்ரா மோசடி.. அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கூறி பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகி!

அண்ணாமலை தலைமையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பா.ஜ.க.வின் முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் அடிக்கடி குற்றம்சாட்டி வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வின் பெண் நிர்வாகி டெய்சி தொடர்பான செய்தியும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி நாளுக்கு நாள் பாஜகவின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிக்கொண்டே இருக்கிறது.

ஆருத்ரா மோசடி.. அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கூறி பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகி!

இந்த சூழலில் பாஜகவில் இருந்து நிர்வாகிகள் தொடர்ச்சியாக விலகி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த சி.டி.ஆர். நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகினார். இவரைத்தொடர்ந்து ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் விலகினார். தலைவர், செயலாளரே இல்லை என்பதால் சென்னை மேற்கு மாவட்ட ஐடி நிர்வாகிகள் 13 பேர் கூண்டோடு விலகினர்.

அதுமட்டுமின்றி, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்தும் விலகினர். இப்படி நாளுக்கு நாள் பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் விலகி வரும் நிலையில் தற்போது பாஜகவின் பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வரும் MR கிருஷ்ணபிரபு விலகியுள்ளார்.

ஆருத்ரா மோசடி.. அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கூறி பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகி!

தான் விலகுவதற்கு இதுதான் காரணம் என்று அறிக்கை வாயிலாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதிப்பும் மரியாதைக்குரிய மாநில தலைவர் அண்ணாமலைக்கு, நான் பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வருகிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூட தகுதி இல்லாத சிலரை நீங்களும் மரியாதைக்குரிய கேசவ விநாயகம் அவர்களும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்ப்பதாலும், கட்சியில் நீங்கள் சொல்வதைப் போல கட்சி உறுப்பினர்களிடமும் நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் கட்சி வளராது.

அதற்கும் மேல் நேர்மாறாக இங்கே அவர்களது சுய லாபத்திற்காகவும் மதம் சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டுக்குள் பலவிதமான சச்சரவுகளையும், மேலும் எங்களிடமிருந்து தொண்டர்கள் நிர்வாகிகள் இருந்தும் பணம் வசூலிக்க சொல்லியும், மேலும் பணத்தைப் பெற்றுக் கொண்டும் பல விதமான அரசியல்களை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆருத்ரா மோசடி.. அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கூறி பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகி!

எங்களை நீங்கள் ஜனநாயகத்துக்கு எதிராக வற்புறுத்தி சில விஷயங்களையும் கோரிக்கைகளையும் செய்ய சொல்வதாலும், என்னைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சிக்கும் உங்களுக்கும் உண்மையாக வேலை பார்த்த நிர்மல் குமாரை போன்ற நிர்வாகிகளையும் பல இன்னல்கள் ஆளாகிய எந்த ஒரு கட்சி வேலையில் செயல்பட விடாமல் செய்தனர்.

மேலும் ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருகிறது. இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு எனது மனம் கொள்ளவில்லை. இந்தக் கட்சி என்னையும் என் குடும்பத்தாரையும் பழுது பார்த்து விட்டனர். மேலும் இந்த பொருளாதார பிரிவின் பிரச்சனைகளையும் நேரடியாக உங்களுக்கும் கட்சி அலுவலகத்துக்கும் பிரச்சினைகளை சொல்லியும், இதுவரை நீங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் நான் எனது பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளரும் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.

ஆருத்ரா மோசடி.. அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கூறி பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகி!

எதற்கு முழு காரணமாக இருக்கும் பொருளாதார பிரிவின் மாநில தலைவர் எம்.எஸ்.ஷா மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் நரசிங்க பெருமாள் இவர்களை எல்லாரையும் வழிநடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு அண்ணாமலை ஆகிய நீங்கள்தான், 'நீங்கள் சரி பட செயல்படவில்லை' என்று குறிப்பிடுகிறேன். பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்த கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது என ஊர்ஜிதமான உண்மை இதற்கு பலவிதமான ஆதாரங்கள் உள்ளன இதற்கும் மேல் பாரதிய ஜனதா கட்சியில் என்னை அர்ப்பணித்தேன் என்றால் எனது உயிருக்கே பல பாதிப்பு வரும் என்று நினைத்து இந்த கட்சியில் இருந்து நான் நிரந்தரமாக ராஜினாமா செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பக்கம் ஆருத்ரா மோசடி வழக்கு, ரபேல் வாட்ச், பாலியல் குற்றச்சாட்டு, முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகல் என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடப்பதா இந்த சம்பவங்கள் அண்ணாமலைக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories