தமிழ்நாடு

”மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையா இருக்கலாம்” : சபாநாயகர் பேச்சால் பேரவையில் எழுந்த சிரிப்பலை!

மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையா இருக்கலாம் என வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

”மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையா இருக்கலாம்” : சபாநாயகர் பேச்சால் பேரவையில் எழுந்த சிரிப்பலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். பின்னர் அந்தக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மின்னணு வடிவிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

”மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையா இருக்கலாம்” : சபாநாயகர் பேச்சால் பேரவையில் எழுந்த சிரிப்பலை!

இந்நிலையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வாசித்தார். அப்போது வேளாண் நிதிநிலை அறிக்கை உரையின்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், "மாப்பிள்ளைச் சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையா இருக்கலாம், தங்கம் சாம்பா சாப்பிட்டால் தங்கமாய் இருக்கலாம். இதை எல்லோரும் சாப்பிட வேண்டும்" என்றார்.

”மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையா இருக்கலாம்” : சபாநாயகர் பேச்சால் பேரவையில் எழுந்த சிரிப்பலை!

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தைப் பார்த்து லேசாகச் சிரித்தார். உடனடியாக சபாநாயகர் அப்பாவு "எல்லாருக்கும் கொடுங்கள், சாப்பிடத் தயாராக இருக்காங்க" என சிரித்தபடியே கூறினார். இதைக்கேட்டு அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் புன்னகைத்து, அமைச்சரின் கருத்தை வரவேற்றனர். இதனால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.

banner

Related Stories

Related Stories