தமிழ்நாடு

“சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் மொழி தெரிந்தவரையும் பணியில் அமர்த்த வேண்டும்” : ஸ்ரிட்டாக சொன்ன TR.பாலு MP !

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் காமராஜர் பெயரையும், அண்ணா பேரையும் கொண்ட பெயர் பலகைகளை வைக்க வேண்டும் என்று, டி.ஆர்.பாலு எம்.பி இந்திய விமான நிலைய ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டது.

“சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் மொழி தெரிந்தவரையும் பணியில் அமர்த்த வேண்டும்” : ஸ்ரிட்டாக சொன்ன TR.பாலு MP !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் முடிந்ததும் மீண்டும், உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரையும், சர்வதேச முனியத்திற்கு அண்ணா பேரையும் கொண்ட பெயர் பலகைகளை வைக்க வேண்டும். சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பணியில் அமர்த்த வேண்டும் என்று, டி.ஆர்.பாலு எம்.பி தலைமையில் நடந்த, சென்னை விமான நிலைய அபிவிருத்தி ஆலோசனை குழு கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டது.

சென்னை விமான நிலைய அபிவிருத்தி பணிகளுக்காக ஆலோசனை குழுவை, இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், தொகுதி எம்.பி தலைமையில் அமைத்துள்ளது. இந்தக் குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி, ஆலோசனை நடத்தும். இந்தக் குழுவில் சென்னை விமான நிலைய இயக்குனர், மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ-க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், விமான நிலைய விமான நிறுவன உயர் அதிகாரிகள் உள்ளனர்.

“சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் மொழி தெரிந்தவரையும் பணியில் அமர்த்த வேண்டும்” : ஸ்ரிட்டாக சொன்ன TR.பாலு MP !

இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை விமான நிலைய கூட்ட அரங்கில் டி.ஆர்.பாலு எம்.பி தலைமையில் நடந்தது. அதில் அமைச்சர் அன்பரசன், விமான நிலைய இயக்குனர் சரத்குமார், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத், எம்.எல்.ஏக்கள் கருணாநிதி, ராஜா, உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னை விமான நிலையத்தில் தற்போது உள்ள இரண்டாவது ஓடு பாதை நீளம் அதிகரிப்பதற்கு, நிலம் கையகப்படுத்தப்படும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். அதோடு தற்போது சென்னை விமான நிலையத்தில் இரண்டு ஓடு பாதைகளும் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படுகின்றன.

“சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் மொழி தெரிந்தவரையும் பணியில் அமர்த்த வேண்டும்” : ஸ்ரிட்டாக சொன்ன TR.பாலு MP !

ஆனால் அதில் சில பிரச்சனைகள் உள்ளன. இரண்டாவது ஓடு பாதைக்கு பின்பகுதியில் அமைந்துள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் உயர்ந்த கட்டிடங்கள், செல்போன் டவர்கள், கோபுரம் மின் விளக்கு கம்பங்கள், உயர்ந்த மரங்கள் போன்றவைகள் விமானங்கள் வந்து தரையிறங்குவதற்கு இடையூறாக இருக்கிறது. எனவே அந்தப் பகுதியில் உள்ள 91 உயர்ந்த கட்டிடங்கள் உயரங்களை குறைக்கும் படி கூறி, அந்தக் கட்டிட உரிமையாளர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே இந்திய விமான நிலைய ஆணையம் நோட்டீஸ்கள் வழங்கி உள்ளன.

ஆனால் கட்டிட உரிமையாளர்கள் இதுவரையில் தங்கள் கட்டிடங்களை உயரங்களை குறைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைப்போல் அந்தப் பகுதியில் உள்ள உயர்ந்த மரங்கள், செல்போன் டவர்கள், கோபுரம் மின்விளக்கு கம்பங்கள், போன்றவைகள் அகற்றப்படுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

“சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் மொழி தெரிந்தவரையும் பணியில் அமர்த்த வேண்டும்” : ஸ்ரிட்டாக சொன்ன TR.பாலு MP !

அதற்கு குழுவின் தலைவர் ஆன டி.ஆர்.பாலு, குடியிருக்கும் மக்களின் வீடுகளை இடிப்பது, என்பது சரியாக இருக்காது. எனவே அதற்குப் பதிலாக மாற்று வழி ஏதாவது உண்டா என்பது பற்றி, ஏர்போர்ட் அத்தாரிட்டி மறு சர்வே செய்ய வேண்டும். மேலும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம், விமான நிலைய நிர்வாகிகள் பணிகளுக்காக இடம் கேட்டு, அவர்கள் தரும் நிலையில் உள்ளனர். அந்த இடத்தை மாநில அரசு மூலமாக, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் விரைந்து செய்து முடிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் சென்னை புதிய விமான நிலையம் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும், உள்நாட்டு விமான நிலைய முகப்பில் காமராஜர் விமான நிலையம் என்றும், சர்வதேச விமான நிலைய முகப்பில், அண்ணா விமான நிலையம் என்றும் பெயர் பலகைகளை, இந்திய விமான நிலையம் ஆணையம் மீண்டும் வைக்க வேண்டும் என்றும், அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

“சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் மொழி தெரிந்தவரையும் பணியில் அமர்த்த வேண்டும்” : ஸ்ரிட்டாக சொன்ன TR.பாலு MP !
Nagendra/Patna/09835420005

சென்னை விமான நிலையத்தில், தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகள் தெரியாத மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதனால் அவர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, தமிழ் மட்டும் தென்னிந்திய மொழிகள் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை அதிக அளவு சென்னை விமான நிலையத்தில் பணியில் அமர்த்த வேண்டும்.

அதோடு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் மிகக் குறைந்த அளவு பணியில் இருப்பதால், பயணிகள் குடியுரிமை சோதனையின் போது நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்படுகின்றனர். எனவே உடனடியாக கூடுதல் குடியுரிமை அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதை விமான நிலைய உயர் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக கூறினர்.

“சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் மொழி தெரிந்தவரையும் பணியில் அமர்த்த வேண்டும்” : ஸ்ரிட்டாக சொன்ன TR.பாலு MP !

அதைப்போல் சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி கார் நிறுத்தம் பகுதியில், நெரிசல்கள் உட்பட பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. அந்த குறைபாடு நீக்கப்பட வேண்டும். அதோடு வாடகை கார்கள், ப்ரீபெய்ட் டாக்ஸிகள் போன்றவைகள் நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

விமான நிலைய இயக்குனர் தரப்பில், சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையம் மற்றும் சென்னை விமான நிலைய கார்கோ பகுதி, அதோடு சென்னை பைபாஸ் சாலை ஆகியவைகளை இணைக்கும் விதத்தில், புதிதாக சாலைகள் அமைக்கப்பட இருக்கிறது.

அதற்கு சுமார் 60 ஏக்கர் நிலம் உடனடியாக தேவைப்படுகிறது. மாநில அரசு அதற்கான நிலத்தை விரைந்து கையகப்படுத்தி, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். மேலும் சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மேலும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.

banner

Related Stories

Related Stories