தமிழ்நாடு

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும்".. அழைப்பு விடுத்த பரூக் அப்துல்லா!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும்".. அழைப்பு விடுத்த பரூக் அப்துல்லா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும்".. அழைப்பு விடுத்த பரூக் அப்துல்லா!

இதைத்தொடர்ந்து சென்னை, பெரியார் நினைவிடத்திற்குச் சென்ற அவர், மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கோபாலபுரம், சி ஐ டி காலனி இல்லங்களில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர், தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்தப்பெற்றார். பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு வரவேற்புரையாற்றினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும்".. அழைப்பு விடுத்த பரூக் அப்துல்லா!

இந்த விழாவில் பேசிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, " காஷ்மீருக்குத் தமிழ்நாட்டுக்கும் பொதுவானதாகத் தட்பவெப்பநிலை, மொழி என எதுவும் இல்லை. ஆனால் இந்தியா என்ற வகையில் நாம் இணைகிறோம். சிறப்பான பணிகளைத் தமிழ்நாட்டில் செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரது தந்தை கலைஞரைப் போன்றே சிறப்பான பணியைச் செய்து வருகிறார்.

எந்த மதத்தினராக இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக வாழும் சூழல் இங்கு உள்ளது. அதனைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். மு.க.ஸ்டாலின் அவர்கள் தேசிய அரசியலுக்கு வர வேண்டும். நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான நம்பிக்கை ராகுல்காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை பயணத்தில் தெரிகிறது.

இன்று நாட்டில் ஜனநாயகம் கடினமாக சூழலில் உள்ளது. ஜனநாயகத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் அச்சுறுத்தல் வந்துள்ளது. நாடு தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது பிரச்சினை இல்லை. நாம் அனைவரும் முதலில் ஒன்றிணைைய வேண்டும் " என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories