தமிழ்நாடு

JNUவில் மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் ABVP பதில் சொல்ல வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஆவேசம்!

டெல்லி ஜெ.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரை பற்றிய கருத்தரங்கு பரப்புரையை தொடங்கவிருக்கிறோம் என தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

JNUவில் மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் ABVP பதில் சொல்ல வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி JNUவில் தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கு பரப்புரை தொடங்கப்படும் என தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசனும் தெரிவித்துள்ளனர். இது குறித்து இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. (ABVP) அமைப்பானது, நேற்று (20-02-2023) தமிழ் மாணவர்களின் மீது குறிவைத்து இனவெறி கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தியைக் கண்டு தமிழ்நாடே கொந்தளித்து நிற்கிறது. இதனைக் கேள்விப்பட்ட கழகத் தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

டெல்லி காவல்துறை, இந்தக் கொடும் நடவடிக்கைகளுக்கு, கண்களை மூடிக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதைக் கண்டு கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாகப் பொதுவுடமை கட்சியை சார்ந்த மாணவர்களை முதலில் தாக்கிய, பா.ஜ.க.-வின் ஏ.பி.வி.பி. அமைப்பு, இப்போது தமிழ்நாடு மாணவர்கள் மீது இனவெறி கொண்டு, கொலைவெறி தாக்குதலை நடத்தியிருக்கிறது.

ஏற்கனவே, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜெ.என்.யூ-வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது, குண்டர்களை வைத்து ஏ.பி.வி.பி. அமைப்பு நடத்திய கொடுந்தாக்குதலை கண்டித்தும், காயமுற்ற ஜெ.என்.யூ மாணவர் அமைப்பின் தலைவர்களை கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையேற்று, கழக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியின் சார்பில் நாங்கள் கழக நிர்வாகிகளுடன் டெல்லி, ஜெ.என்.யூ-விற்கு சென்று, காயமுற்ற ஜெ.என்.யூ மாணவர் சங்க தலைவர்களை சந்தித்து ஆறுதல் கூறினோம்.

JNUவில் மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் ABVP பதில் சொல்ல வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஆவேசம்!

மேலும், ஜெ.என்.யூ மாணவர்களை, மாணவர் போர்வையில் வந்து தாக்கிய குண்டர்களையும், அவர்களை ஏவிவிட்ட ஏ.பி.வி.பி. அமைப்பினரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எங்களது கண்டன குரலை எழுப்பினோம்! அச்சம்பவத்தினால், ஜனநாயக மாண்பினை மதிக்கும் இந்திய அளவிலான அனைத்து மாணவர் அமைப்புகளும் வெகுண்டெழுந்து ஏ.பி.வி.பி.-விக்கு பெரும் கண்டனங்களை தெரிவித்ததை நாடறியும்.

தன்னுடைய கொடூர சர்வாதிகாரத்தில் கோலோச்சுகிற பா.ஜ.க. ஆட்சியின் தலைமையிடமாக விளங்கும் டெல்லி தலைமையிடத்திற்கே, தி.மு.க. இளைஞர் அணியும், மாணவர் அணியும் நிர்வாகிகளுடன் சென்று காயமுற்ற மாணவர்களுக்கு ஆறுதல் சொல்லி, கண்டனத்தை பதிவு செய்தது ஏ.பி.வி.பி.-க்கு பெரும் எதிர்வினை தந்தது.

அண்மையில் குஜராத் கலவரம் குறித்து பி.பி.சி. செய்தி தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஆவணப் படத்தை திரையிட முயன்ற ஜெ.என்.யூ பல்கலைக் கழகத்தின் மாணவர்களை தடுத்தி நிறுத்தி, பா.ஜ.க. அரசின் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை பொதுவுடமை கட்சிகள் உட்பட தி.மு.க. மற்றும் பல்வேறு ஜனநாய முற்போக்கு அமைப்புகள் கண்டித்தது.

இந்நிலையில், ஜெ.என்.யூ. பல்கலைக் கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர்கள் மீது இனவெறி தன்மையோடு, கொலைவெறி தாக்குதலை ஏ.பி.வி.பி. அமைப்பு நடத்தியுள்ளது. மேலும், சமூகநீதி, பெண்ணுரிமை, சாதி மறுப்பு, மதவெறி எதிர்ப்பு என்று சமூக சீர்த்திருத்தத்தை, சமத்துவத்தை ஏற்படுத்தி தந்திருக்கக்கூடிய தந்தை பெரியாரின் படத்தையும், பொதுவுடமை தலைவர்களின் உருவப்படங்களையும் உடைத்து தங்கள் மதவெறி, இனவெறி, இந்துத்துவா அரசியலை ஜெ.என்.யூ பல்கலைக் கழகத்தில் மீண்டும் அரங்கேற்றியிருக்கிறது ஏ.பி.வி.பி. அமைப்பு.

JNUவில் மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் ABVP பதில் சொல்ல வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஆவேசம்!

உலகத்தில் எந்தஒரு மூலையிலும் தமிழர்களுக்கு ஒரு இடையூறு, இன்னல் ஏற்படுமாயின் அதனை கண்டித்தும், தமிழர்களுக்கு கை கொடுத்து உயர்த்தும் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையேற்று, கழக இளைஞர் அணியும், மாணவர் அணியும் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பு, தமிழ் மாணவர்களின் மீது நடத்தியுள்ள கொடுந்தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறது.

மாணவர்கள் மாறுபட்ட அரசியல் கருத்துகளுக்கு விவாதிப்பதும், கருத்தியல் போர் நடத்திட வேண்டுமென்பது அரசியல் மாண்பாகும். ஆனால், வெறுப்பு அரசியலையும், வெறிகொண்ட தாக்குதலையும் தன் சித்தாந்தமாய் கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பு குண்டர்களாய், ரவுடிகளாய் மாறி டெல்லியில் பயிலும் தமிழ் மாணவர்களை தாக்கியிருப்பதற்கு அவர்கள் தார்மீகப் பொறுப்பேற்று மன்னிப்பு கோர வேண்டும். தமிழ் மாணவர்கள் டெல்லியில் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும், பா.ஜ.க.வின் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

தி.மு.கழகம் என்றென்றும், தந்தை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வகுத்து தந்துள்ள அறவழியில் அறிவாயுதம் ஏந்தி போரிடுகிறோம். சமூகநீதி, பெண்ணுரிமை, மொழி உரிமை, சாதி மறுப்பு, மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகிய கொள்கைகளை பா.ஜ.க.வின் தலைமைபீட செவிப்பறை கிழியும் வரை எதிரொலித்துக்கொண்டே இருக்கும். உடைக்கப்பட்ட தந்தை பெரியாரின் உருவப்படம் அங்கு மீண்டும் புதியதாய் காட்சியளிக்கிறது!

மேலும், விரைவில், டெல்லி ஜெ.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரை பற்றிய கருத்தரங்கு பரப்புரையை தொடங்கவிருக்கிறோம்.

டெல்லி ஜெ.என்.யூ. பல்கலைக் கழகத்தில் பயிலும், தமிழ்நாட்டு மாணவர்களை இனவெறியோடு கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் பா.ஜ.க.வின் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் மீது, பல்கலைக் கழக நிர்வாககமும், டெல்லி காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கழகத் தலைவர்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆதரவாய் களமாட தி.மு.க. இளைஞர் அணியும், மாணவர் அணியும் என்றென்றும் துணை நிற்கும்!

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories