தமிழ்நாடு

“நீர் நிலைகளில் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை..” - அமைச்சர் மா.சு எச்சரிக்கை !

நீர் நிலைகளில், குளக்கரைகளில் மருத்துவ கழிவுகள், கோழி கழிவுகள் போன்றவற்றை கொட்டினால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“நீர் நிலைகளில் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை..” - அமைச்சர் மா.சு எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் 2023-24ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

“நீர் நிலைகளில் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை..” - அமைச்சர் மா.சு எச்சரிக்கை !

இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை நிறுவனர்கள், அரசு மருத்துவ பணியாளர்கள், அரசு மருத்துவத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அவர்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

முன்னதாக இத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் இதற்கு முன்பு மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தார்களின் கருத்துக்கள் அனைத்தும் கலந்தாலோசிக்கப்பட்டு இத்துறை அலுவலர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“நீர் நிலைகளில் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை..” - அமைச்சர் மா.சு எச்சரிக்கை !

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூட்டம் தொடர்பான முக்கிய சாராம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு பதில்களை தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அமைச்சர், "மாநில திட்டக்குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தார்கள். இதுமக்கள் நல்வாழ்வு துறையை சிறப்பாக வளர்க்க முன்னெடுக்க நல்ல முயற்சி.

“நீர் நிலைகளில் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை..” - அமைச்சர் மா.சு எச்சரிக்கை !

இதில் புற்றுநோய் காசநோய் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படும் நிலையில் உள்ளன. தூய்மை பணியாளர்களுக்கான ஊதியம் உயர்வு தொடர்பாக சம்பந்தட்ட நிறுவனங்களிடம் துறை செயலாளர்கள் பேசி வருகின்றனர். 750 புதிய 108 வாகனங்கள் 2 ஆண்டுகளில் வாங்கப்பட்டுள்ளது.

காசநோய் கண்டறிய டிஜிட்டல் X ray வசதி உடன் 23 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் லஞ்ச புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோழிக்கழிவுகள், மருத்துவக் கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டினால் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படுகிறது. கோவிட் கட்டுப்பாடுகள் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு random சோதனை நடக்கிறது" என்றார்.

banner

Related Stories

Related Stories