தமிழ்நாடு

“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)

என் தாயார், நான் குழந்தையாக இருந்த போதே, பூமி பந்தின் நிலத்தின் மீது உறுதியாக காலூன்றி நிற்க வேண்டும் என்று சொல்லி கொடுத்திருக்கிறார் என சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா தெரிவித்துள்ளார்.

“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புரட்சியாளர் சேகுவேராவின் புதல்வி மருத்துவர் அலெய்டா குவேரா, பேத்தி எஸ்டெஃபானி குவேரா ஆகியோருக்கு மாபெரும் வரவேற்பு மற்றும் சோசலிச கியூபாவிற்கு தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைத் தெரிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி புதனன்று மாலை சென்னையில் பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக்குழு இணைந்து இந்த நிகழ்வை நடத்தின.

“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)

நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒருமைப்பாட்டுக்குழுத் தலைவர் எம்.ஏ.பேபி, சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)

இந்நிகழ்வில் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா பேசுகையில், “நான் சே-வின் மகள் என்பதால் ஏராளமானோர் என் மீது அன்பை பொழிகிறீர்கள். அதற்காக நான் ஒரு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.நான் யாருடைய மகள் என்பது எப்போதும் முக்கியமல்ல. நான் யாராக இருக்கிறேன் என்பதே முக்கியம். என் தாயார், நான் குழந்தையாக இருந்த போதே, பூமி பந்தின் நிலத்தின் மீது உறுதியாக காலூன்றி நிற்க வேண்டும் என்று சொல்லி கொடுத்திருக்கிறார்.

“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)

எனவே நான் சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை. நான் என் அம்மாவின் மகள் என்பதற்காகவும் பெருமை கொள்கிறேன். சமூக நீதிக்கு தேவையான செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்று எனது தாய் சிறுவயதிலேயே சொல்லி கொடுத்து வளர்த்திருக்கிறார். இந்தியாவிற்கு நான் முதல்முறை வந்தபோது, என் மகள் எஸ்டெஃபானி சிறு குழந்தையாக இருந்தார்.

“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)

இந்தியாவில் நிறைய யானைகள் இருப்பதை அறிந்துகொண்ட அவள், அதன் புகைப்படங்கள் வேண்டும் என்று கூறினாள். கேரளாவிற்கு நான் வந்த போது, அங்கிருந்த மிகப்பெரிய யானையை காட்டியதோடு, போராளி மகள் என்பதால் தைரியமாக என்னை யானை மீது ஏற்றி அமரவும் வைத்தார்கள். ஒரு 15 நிமிடங்கள் நான் யானை மீது அமர்ந்தது என்னால் மறக்க முடியாது. இந்தியாவில், தமிழ்நாட்டிற்கு வரும் போது தோழர்களின் அன்பும், அந்த நாட்களும் நினைவில் இருக்கிறது.

“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)

கடந்த முறை எங்கு சென்றாலும் மாலைகள் அணிவித்து வரவேற்பு அளித்தனர். இம்முறை மாலைக்கு பதில் சால்வைகள் அணிவித்து வரவேற்றுள்ளனர். இந்த சால்வைகளை நான் கியூபாவுக்கு எடுத்து செல்ல போகிறேன். எனக்கு தமிழ்நாட்டில் கிடைத்த பேரன்பை, கியூபா கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் பகிர்ந்துகொள்வேன். இன்று நாம் அனைவரும் ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டுக்காகவும் கூடி இருக்கிறோம். இடதுசாரிகள் உலகம் முழுவதும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டமைக்க வேண்டிய கடமை இருக்கிறது.

“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)

நாம் என்ன செய்தாலும் அதில் ஒரு பொதுநோக்கம் தேவைப்படுகிறது. உங்கள் மாநிலம் தமிழ்நாடு என்று உரக்க சொன்னீர்கள். இன்றைக்கு இந்த பிரச்சினையில் தமிழ்நாடு என்ற பெயர்தான், உங்களை இணைக்கிறது. எந்த பொதுநோக்கமாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும். கியூபா இன்று சந்திக்கும் பிரச்சினைகளுக்கு, மக்களின் ஒருமைப்பாடு அதிக தேவையாக இருக்கிறது.

“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)

கியூபா மீது அமெரிக்கா ஏராளமான தாக்குதல்களை தொடுத்துக் கொண்டு இருக்கிறது. பொருளாதார தடையால் கியூபாவின் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எந்த அளவிற்கு தடை என்றால், மிகச்சிறந்த சுற்றுலா கியூபாவில் இருக்கிறது. இதன் மூலம் எண்ணற்ற விஷயங்களை பரிமாறக் கொள்ள முடியும். ஆனால் அந்த பொருட்களை ஏற்றிச் செல்ல எங்களிடம் விமானம் இல்லை. அதனால் விமான நிறுவனங்களோடு குறுகிய கால ஒப்பந்தம் செய்தால், உடனடியாக அமெரிக்கா தலையிடும். இதுபோன்ற ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. மருந்து, உணவு உள்ளிட்ட பொருளாதாரத்தின் எல்லா தளங்களிலும் எங்கள் மீது தாக்குதல் நடக்கிறது. நாங்கள் மேம்பட அமெரிக்காவின் பொருளாதார தடை நீக்கப்பட வேண்டும்.

“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)

நாங்கள் அமெரிக்காவுடன் சரிசமமான அந்தஸ்தின் அடிப்படையில் வியாபாரம் செய்ய விரும்புகிறோம். எந்த கப்பலும் எங்கள் கடற்கரைக்கு வர மறுக்கிறார்கள். எத்தனை தடைகள் வந்தாலும், கியூபா மக்களின் வாழ்வதற்கான உரிமையை தடுக்க முடியவில்லை. மக்களின் மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக சோசியலிஷ சமூக அமைப்பை உருவாக்க விரும்புகிறோம்.

“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)

குடும்ப அம்சங்களிலும் சமத்துவம் இருக்க வேண்டும். பெண்களுக்காக ஏராளமான திட்டங்கள் கியூபாவில் உள்ளது. ஏனென்றால் பெண்கள் உயிரை உற்பத்தி செய்யக் கூடிய அதிகாரம் பெற்றவர்கள். பெண்களால் பெரும் வேகத்தோடும், உணர்வோம் போராட முடியும். இந்தியாவுக்கும் கியூபாவுக்கும் தூரம் அதிகமாக இருக்கலாம். ஆனால் இரு மக்களும் சகோதரர்கள் தான். இன்றைய சூழலில் நமது பலத்தை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது.

“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)

என் தந்தை பொலிவியாவில் கொலை செய்யப்பட்டார். அதற்காக உலகம் முழுவதும் அழுது புலம்பினார்கள். அதனை வைத்து பாடல்கள் உருவாகின. ஒரு பாடலை குறிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். அது, இழப்பு என்றாலே துயரம் தான். ஆனால், இழப்புக்குள் நமது பலத்தை அதிகரித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளது. எனவே ஒருவர் இறந்தால், நாம் ஒருவரை இழந்தால், உலகம் வருத்தப்படும் என்பது உண்மை. ஆனால், வருத்தம் கண்ணீரால் இல்லாமல் போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்த முடியும். நான் இறந்தால் எனக்காக நீங்கள் அழாதீர்கள். அதற்கு பதில், நான் விட்டுச்செல்லும் பணிகளை தொடருங்கள் என்பது தான் என்று தெரிவித்தார்.

“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
“சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை..” : அலெய்டா குவேராவின் உணர்வுபூர்வமான பேச்சு! (Photos)
banner

Related Stories

Related Stories