தமிழ்நாடு

குளத்தில் மூழ்கி சிறுமி, இளம் பெண் பலி! தாய் இறந்த 8 வது நாளே மகள் உயிரிழந்த சோகம்!

தூத்துக்குடியில் குள்ளத்தில் மூழ்சி சிறுமியும், இளம் பெண்ணும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளத்தில் மூழ்கி சிறுமி, இளம் பெண் பலி!
தாய் இறந்த 8 வது நாளே மகள் உயிரிழந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மாவட்டம், நயினார் புரத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி சண்முத்தாய். இந்த தம்பதிக்குச் சுடலைக்கனி, வள்ளி, திவ்யதர்ஷினி என மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 30ம் தேதி சண்முகத்தாய் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கடந்த சனிக்கிழமையன்று சண்முகத்தாய் இறப்பு சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.

குளத்தில் மூழ்கி சிறுமி, இளம் பெண் பலி!
தாய் இறந்த 8 வது நாளே மகள் உயிரிழந்த சோகம்!

இதில் உறவினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது உயிரிழந்த சண்முத்தாயின் மகள்கள் மற்றும் உறவினர்கள் அருகே உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது உறவினர்களின் சிறுமி கோகிலா என்பவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சண்முத்தாயின் மகள் சுடலைக்கனி தண்ணீருக்குள் இறங்கி சிறுமியைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் இருவருமே குளத்திற்குள் இருந்த சேற்றில் சிக்கியுள்ளனர்.

குளத்தில் மூழ்கி சிறுமி, இளம் பெண் பலி!
தாய் இறந்த 8 வது நாளே மகள் உயிரிழந்த சோகம்!

பின்னர், பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு உடனே தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கித் தேடினர். பிறகு இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். தாய் இறந்த எட்டாவது நாளே மகளும், அவரது உறவினர் சிறுமியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories