தமிழ்நாடு

“கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் காதல் பறவைகளுக்கு அமைச்சர் தலைமையில் திருமணம்” - நெகிழ்ச்சி சம்பவம்!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த தீபா - மகேந்திரனுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

“கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் காதல் பறவைகளுக்கு அமைச்சர் தலைமையில் திருமணம்” - நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையை சேர்ந்தவர் மகேந்திரன். பட்டதாரியான இவர் அதிகப்படியான கோபம், மனஅழுத்தம் காரணமாக கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் இரண்டு வருடம் ட்ரீட்மென்ட் எடுத்துள்ளார். இவருக்கு சொந்தம் என சொல்லி கொள்ள பெரிதாக யாரும் இல்லாததால் ட்ரீட்மென்ட் எடுத்த கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் டேகேரில் ஹவுஸ்கீப்பிங் சூப்பர்வைசராக வேலை செய்துவருகிறார்.

இவர் அங்கு வேலை செய்துகொண்டிருந்த போது அந்த அரசு மனநலக் காப்பகத்துக்கு தீபா என்ற ஆசிரியரும் ட்ரீட்மென்ட்கு வந்துள்ளார். பின்னர் அவரும் ட்ரீட்மென்ட் முடிந்ததும் கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் cafe r'vive-ல் வேலை செய்து வருகிறார்.

“கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் காதல் பறவைகளுக்கு அமைச்சர் தலைமையில் திருமணம்” - நெகிழ்ச்சி சம்பவம்!

இந்த நிலையில், தற்போது 42 வயதான மகேந்திரனுக்கும் 36 வயதான தீபாவுக்கும் காதல் மலர்ந்துள்ளார். இதனை இருவரும் அரசு மனநல காப்பகத்தின் இயக்குனர் பூர்ண சந்திரிகாவிடம் கூறியுள்ளனர். உடனே இவர்களின் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்த அவர் இருவரின் குடும்பத்தாரிடமும் இது குறித்து பேசி சம்மதம் வாங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்த காதல் பறவைகளுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. மகேந்திரன் - தீபா இணைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories