தமிழ்நாடு

நீர்வீழ்ச்சியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு.. உறவினர்களுடன் சுற்றுலா வந்த இடத்தில் நடந்த துயர சம்பவம்!

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை புத்தூர் நீர்வீழ்ச்சியில் உறவினர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீர்வீழ்ச்சியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு.. உறவினர்களுடன் சுற்றுலா வந்த இடத்தில் நடந்த துயர சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாது மலையை ஒட்டி உள்ள ஊர்கவண்டனூர் ஊராட்சி வனப்பகுதி அருகே உ குண்டூர் நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஹாரிப் என்ற வாலிபர் தனது உறவினர்களுடன் சுற்றுலா வந்துள்ளார். அப்போது ஹாரிப் அறுவியில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவர் நீர்வீழ்ச்சிக்குள் மூழ்கினார்.

நீர்வீழ்ச்சியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு.. உறவினர்களுடன் சுற்றுலா வந்த இடத்தில் நடந்த துயர சம்பவம்!

பின்னர், நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த ஹாரிப் காணாததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு இது பற்றி போலிஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நீர்வீழ்ச்சியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு.. உறவினர்களுடன் சுற்றுலா வந்த இடத்தில் நடந்த துயர சம்பவம்!

பின் விரைந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீர்வீழ்ச்சியில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பிறகு சில மணி நேரம் தேடுதலை அடுத்து ஹாரிப் உடல்மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டது. அவரது உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீர்வீழ்ச்சியில் உறவினர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories