தமிழ்நாடு

ஜெ. இறந்த தேதியில் முரண்பாடு.. சசிகலா, விஜயபாஸ்கர் குற்றவாளி: ஆறுமுகசாமி ஆணையம் பகீர் தகவல்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது..

ஜெ. இறந்த தேதியில் முரண்பாடு.. சசிகலா, விஜயபாஸ்கர் குற்றவாளி: ஆறுமுகசாமி ஆணையம் பகீர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்டது.இதையடுத்து ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.

இதையடுத்து 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்தது. பின்னர் இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஜெ. இறந்த தேதியில் முரண்பாடு.. சசிகலா, விஜயபாஸ்கர் குற்றவாளி: ஆறுமுகசாமி ஆணையம் பகீர் தகவல்!

அதன் விவரம் வருமாறு:-

22.09.2016 அன்று இரவு சுயநினைவற்ற நிலையில் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வதை பற்றி டாக்டர் சுமின் சர்மா விளக்கிய பிறகும் ஆஞ்சியோ செய்யப்படவில்லை.

டாக்டர் ரிச்சர்டு பீலே, ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்தச் செல்ல தயார் என கூறியும் அது ஏன் நடக்கவில்லை. போயஸ் கார்டனில் மயங்கி விழுந்து ஜெயலலிதா மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டதற்கு பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா இறந்த தேதி குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ளன. ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள். 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது.

ஜெயலலிதா டிச. 5ம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிச. 4ம் தேதியே இறந்தார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெ. இறந்த தேதியில் முரண்பாடு.. சசிகலா, விஜயபாஸ்கர் குற்றவாளி: ஆறுமுகசாமி ஆணையம் பகீர் தகவல்!

சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுவதை தவிற வேறு எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் ஆணையத்தில் முன்வைக்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவக்குழு 5 முறை அப்போலோ வந்திருந்தாலும் ஜெயலலதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டது.

சசிகலா, டாக்டர் சிவகுமார் முன்னாள், அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. சசிகலா மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்த பிறகு ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சமூக உறவு இல்லை. 2011 நவம்பரில் சசிகலா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் பின்னர் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். சசிகலாவின் மறு வருகைக்குப் பிறகு இருவருக்கும் இடையே முன்பு இருந்த நல்லுறவு சமூகமாக இல்லை.

இவ்வாறு ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories