தமிழ்நாடு

“புவிசார் குறியீடு பெற்ற 475 கலை பொருட்களில் ‘தஞ்சை கலைதட்டு’ முதலிடம்” - ஒன்றிய அரசு அறிவிப்பு !

இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற 475 கலை பொருட்கள் குறித்த வாக்கெடுப்பில் தஞ்சை கலைதட்டு முதலிடம் பெற்றுள்ளது.

“புவிசார் குறியீடு பெற்ற 475 கலை பொருட்களில் ‘தஞ்சை கலைதட்டு’ முதலிடம்” - ஒன்றிய அரசு அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்தன்மையுடன் பாரம்பரியமாகத் விளைவிக்க அல்லது தயாரிக்கப்படும் உணவு வகைகளுக்கு அதன் தரத்தைப் பாதுகாக்கும் விதமாக வழங்கப்படும் சான்று. இந்த புவிசார் குறியீடு பெரும் பொருள், ஒரு மாநிலத்தின் தனித்துவம் பெற்ற சிறப்புமிக்கதாக இருக்கும்.

இதே போன்ற தனித்துவம் பெற்றக் காரணிகளின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் விளையும், மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பூட்டுக்கும், காரைக்குடி கண்டாங்கி சேலை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாக்கும் மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

“புவிசார் குறியீடு பெற்ற 475 கலை பொருட்களில் ‘தஞ்சை கலைதட்டு’ முதலிடம்” - ஒன்றிய அரசு அறிவிப்பு !

இந்நிலையில், இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற 475 கலை பொருட்கள் குறித்த வாக்கெடுப்பில் தஞ்சை கலைதட்டு முதலிடம் பெற்றுள்ளது. இதுகுறித்து அறிவு சார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் நோடல் அலுவலர் பசஞ்சய் காந்தி செய்தியாளரிடம் கூறியதாவது, “இந்தியாவில் தலைசிறந்த பொருட்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஒரு மாதமாக பொது வாக்கெடுப்பை ஒன்றிய பா.ஜ.க அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் நடத்தியது.

இந்த போட்டியில் புவிசார் குறியீடு பதிவு பெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றன. கைவினைப் பொருள், விவசாய பொருள், இயற்கை பொருள், உற்பத்தி பொருள், உணவு பொருள், இந்த ஐந்து வகைக்காண தேசிய விருது வழங்கப்படும்.

“புவிசார் குறியீடு பெற்ற 475 கலை பொருட்களில் ‘தஞ்சை கலைதட்டு’ முதலிடம்” - ஒன்றிய அரசு அறிவிப்பு !

அந்தவகையில், கைவினை பொருளுக்கான பிரிவு போட்டியில் தஞ்சாவூர் கலைத்தட்டு முதலிடத்தை பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற விழாவில் தஞ்சாவூர் தட்டிற்கு அறிவு சார் சொத்துரிமைக்கான 2022 ஆம் ஆண்டு தேசிய விருது கிடைத்தது.

கடந்த தஞ்சாவூர் கலைத்தட்டிற்கு 2006 புவிசார் குறியீடு பதிவு காண விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2007 புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்தது. இதில், 200 மேற்பட்ட கைவினைக் கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்ய வேண்டிய ஏற்பாடு செய்து அதனை வெற்றிகரமாக முடித்தவர் தான் புவிசார் குறியீடு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி ஆவார்.

“புவிசார் குறியீடு பெற்ற 475 கலை பொருட்களில் ‘தஞ்சை கலைதட்டு’ முதலிடம்” - ஒன்றிய அரசு அறிவிப்பு !

இவர் 27 க்கு மேற்பட்ட பொருட்களை புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்து தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஆக்கிய பெருமையை சாரும். தஞ்சாவூர் கலைத்தட்டு (அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்) தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, ஒரு பொம்மை, நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, நரசிங்கம்பட்டி நாதஸ்வரம் ஆகிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட பொருளை தஞ்சாவூருக்கு பெற்றுக் கொடுத்து தமிழ்நாட்டிற்கும் சஞ்சய் காந்தி பெருமை தேடித் தந்துள்ளார்.

“புவிசார் குறியீடு பெற்ற 475 கலை பொருட்களில் ‘தஞ்சை கலைதட்டு’ முதலிடம்” - ஒன்றிய அரசு அறிவிப்பு !

இந்த நிலையில், சட்டம் இயற்றி 19 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இந்திய அரசு சார்பில் முதல் முதலில் உருவாக்கப்பட்ட அறிவு சார் சொத்துரிமைக்கான தேசிய விருது பொது வாக்கெடுப்பு மூலம் தஞ்சாவூர் தட்டிற்கு கிடைத்தது தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கிடைத்த பெருமை என்று சஞ்சய் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சாவூர் தட்டு என்பது எந்த ஊரிலும் செய்ய முடியாத கலைநயமிக்க ஐம்பொன்னால் உருவாக்கப்படும் கலைத்தட்டாகும். 250 ஆண்டு வரலாற்றை பூர்வீகமாகக் கொண்டது. தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னர் காலத்தில் தனி முத்திரையை படைத்ததும் இந்த கலைத்தட்டு உலகமெங்கும் வியாபாரதியில் கொடி கட்டி பறக்கும் என்று குறிப்பிட்டார் சஞ்சய் காந்தி.

banner

Related Stories

Related Stories