தமிழ்நாடு

தின்பண்டம் என நினைத்து விசிலை விழுங்கிய குழந்தை.. தாய் கண்முன்னே நடந்த கொடூரம்!

சென்னையில், விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக விசிலை விழுங்கிய ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தின்பண்டம் என நினைத்து விசிலை விழுங்கிய குழந்தை.. தாய் கண்முன்னே நடந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி வனஜா. இந்த தம்பதிக்கு தர்சன் என்ற 3 வயது மகனும், கயல்விழி என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கயல்விழி அங்கிருந்த விசிலை எடுத்து தின்பண்டம் என நினைத்து விழுங்கியுள்ளது. இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் திணறியுள்ளது.

தின்பண்டம் என நினைத்து விசிலை விழுங்கிய குழந்தை.. தாய் கண்முன்னே நடந்த கொடூரம்!

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் வனஜா குழந்தையை உடனே தூக்கிக் கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்குச் சென்றார். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

தின்பண்டம் என நினைத்து விசிலை விழுங்கிய குழந்தை.. தாய் கண்முன்னே நடந்த கொடூரம்!

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடும் போது தின்பண்டம் என நினைத்துத் தவறுதலாக விசிலை விழுங்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories