தமிழ்நாடு

அதிவேகமாக வந்த பைக்.. நள்ளிரவில் தாய் மற்றும் 6 மாத பெண் குழந்தைக்கு நடந்த துயரம்!

சென்னையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தாய் மற்றும் 6 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேகமாக வந்த பைக்.. நள்ளிரவில் தாய் மற்றும் 6 மாத பெண் குழந்தைக்கு நடந்த  துயரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அண்ணா நகர், என். எஸ். கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூங்குழலி. இவர் தனது 6 மாத குழந்தையுடன் , தங்களுக்குச் சொந்தமான ஸ்டிக்கர் கடைக்குப் பூஜை போடுவதற்காகச் சாலையில் நடந்து சென்றுள்ளார். இதையடுத்து அவர் அண்ணா நினைவு வளையம் மேம்பாலம் அருகே இன்று அதிகாலை சாலை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று தாய் மீது மோதியது.

அதிவேகமாக வந்த பைக்.. நள்ளிரவில் தாய் மற்றும் 6 மாத பெண் குழந்தைக்கு நடந்த  துயரம்!

இதில் தாய் மற்றும் 6 மாத குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரும், பெண்ணும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் உயிரிழந் தாய் மற்றும் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதிவேகமாக வந்த பைக்.. நள்ளிரவில் தாய் மற்றும் 6 மாத பெண் குழந்தைக்கு நடந்த  துயரம்!

மேலும் போலிஸாரி முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியது என்பது தெரியவந்துள்ளது. அந்த இளைஞர் யார், அவருடன் வந்த பெண் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories