தமிழ்நாடு

கோவில் குளத்தில் டிராக்டர் டிரைலர் திருட்டு.. வலைவீசி தேடிய போலிஸார்.. இறுதியில் சிக்கிய பாஜக தலைவர்!

பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில் இருக்கும் கண்ணன் என்பவர் டிராக்டர் டிரைலர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவில் குளத்தில் டிராக்டர் டிரைலர் திருட்டு.. வலைவீசி தேடிய போலிஸார்.. இறுதியில் சிக்கிய பாஜக தலைவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அருகே ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருப்பாற்கடல் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தில் தற்போது நகராட்சி சார்பில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இராஜபாளையத்தை சேர்ந்த தனியார் ஒப்பந்தக்காரர் இந்த பணியை செய்து வருகிறார். கட்டிட பணிகளுக்காக அவ்வப்போது அப்பகுதியில் கண்டெய்னர், டிராக்ட்டர், டிரைலர் மற்றும் கட்டுமான பொருட்கள் சேமிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

கோவில் குளத்தில் டிராக்டர் டிரைலர் திருட்டு.. வலைவீசி தேடிய போலிஸார்.. இறுதியில் சிக்கிய பாஜக தலைவர்!

இந்நிலையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர் ட்ரெய்லர் ஒன்று காணாமல் போனது. இது தொடர்பாக கட்டுமான ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடம்பன்குளம் பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர்களின் மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் அவரது சகோதரர் கருப்பசாமி ஆகியோருக்கு இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.

இதையடுத்து நகர காவல் நிலைய போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தியதில் கண்ணன் மற்றும் கருப்பசாமி இருவர் தான் ட்ரெய்லரை திருடியதாக ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த நகர காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். பொதுப்பணியில் ஈடுபட்டிருந்த டிரைலரை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளருவர் திருடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories