தமிழ்நாடு

சாலையில் சென்றபோது திடீரென பற்றி எரிந்த சொகுசு கார்.. நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்: நடந்தது என்ன?

சென்னை அடுத்து வண்டலூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் சென்றபோது திடீரென பற்றி எரிந்த சொகுசு கார்.. நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காரைக்குடியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது சென்னை அடுத்துள்ள நொளம்பூரில் உள்ள அக்கா வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வண்டலூர் செல்வதற்காக இன்று காரில் சதீஷ், பிரதீப் ஆகிய சென்றுள்ளனர். இதையடுத்து திருநீர்மலை அருகே சென்றபோது திடீரென காரின் முன் பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. இதைப்பார்த்த சதீஷ் உடனே காரை நிறுத்தியுள்ளார்.

சாலையில் சென்றபோது திடீரென பற்றி எரிந்த சொகுசு கார்.. நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்: நடந்தது என்ன?

பின்னர் இருவரையும் காரை விட்டு இறங்கியுள்ளனர். உடனே சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீ பிடித்து எரிந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கார் முழுமையாக எரிந்து நாசமானது.

சாலையில் சென்றபோது திடீரென பற்றி எரிந்த சொகுசு கார்.. நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்: நடந்தது என்ன?

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார் தீப்பிடித்தற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories