தமிழ்நாடு

கணவன் இறந்த சோகம்.. மகனை கிணற்றில் வீசிவிட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு - சோகத்தில் மூழ்கிய கிராமமக்கள்!

கணவர் இறந்த துக்கத்தில் மகனுடன் மனைவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் இறந்த சோகம்.. மகனை கிணற்றில் வீசிவிட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு - சோகத்தில் மூழ்கிய கிராமமக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாமக்கல் மாவட்டம் மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு கீதா என்ற மனைவியும், ரித்வின் என்ற 3 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் சரவணன் உயிரிழந்ததால் மனைவி கீதா மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனால் கீதாவின் பெற்றோர் அவரின் மனவேதனையை குறைப்பதற்காக அருகில் உள்ள கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி படிக்க வைப்பதற்காக சேர்த்து வைத்துள்ளனர்.

ஆனாலும் தொடர்ந்து கணவன் இறந்த துக்கத்தில் இருந்த கீதா, தனது மகளுடன் கொண்டப்பநாயக்கனூருக்கு சென்றுள்ளார். அங்கிருந்த விவசாய கிணற்றில் மகனை தூக்கி வீசி கொலை செய்துவிட்டு, அவரும் குத்தித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

கணவன் இறந்த சோகம்.. மகனை கிணற்றில் வீசிவிட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு - சோகத்தில் மூழ்கிய கிராமமக்கள்!

இதனையடுத்து சிறிது நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்போலிஸார் மற்றும் தீயணைப்புத் துறைக்கு அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், தீணைப்பு துறையினரின் உதவியுடன் கீதா மற்றும் அவரின் மகனின் சடலத்தை மீட்டனர்.

இதனையடுத்து இருவரின் உடலையும் உடற்கூறு ஆய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் இறந்த துக்கத்தில் மகனுடன் மனைவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

banner

Related Stories

Related Stories