தமிழ்நாடு

நீச்சல் தெரியாத நண்பனை ஏரியில் குளிக்க வற்புறுத்தியதால் நடந்த சோகம்: விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீச்சல் தெரியாத நண்பனை சக நண்பர்கள் ஏரியில் இறங்கி குளிக்க வற்புறுத்தியதால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீச்சல் தெரியாத நண்பனை ஏரியில் குளிக்க வற்புறுத்தியதால் நடந்த சோகம்: விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இளைஞரான இவர் கோவூர் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். சனிக்கிழமையன்று ஜெகதீசன் தனது நண்பர்கள் சூர்யா, யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரிக்குச் சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் ஏரியில் இறங்கிக் குளித்துள்ளனர்.

மேலும் நீச்சல் தெரியாத ஜெகதீசன் படியில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை நண்பர்கள் நீச்சல் அடிக்கும்படி வற்புறுத்தி ஏரியில் இறக்கியுள்ளனர்.

நீச்சல் தெரியாத நண்பனை ஏரியில் குளிக்க வற்புறுத்தியதால் நடந்த சோகம்: விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!

அப்போது அவருக்கு நீச்சல் தெரியாததால் ஏரியில் மூழ்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்கப் போராடியுள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலிஸார் ஏரியில் ஜெயதீசன் உடலை தேடினர்.

நீச்சல் தெரியாத நண்பனை ஏரியில் குளிக்க வற்புறுத்தியதால் நடந்த சோகம்: விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!

பின்னர் நீண்ட நேரத்திற்குப் பிறகு ஜெகதீச உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் தெரியாமல் பள்ளி மாணவர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories