தமிழ்நாடு

5 வது திருமணம் செய்ய முயன்ற கணவன்.. காவல் நிலையத்தில் 4வது மனைவி பரபரப்பு புகார்!

கடலூரில் 5 பெண்களை திருமணம் செய்து வாலிபர் ஒருவர் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 வது திருமணம்  செய்ய முயன்ற கணவன்..  காவல் நிலையத்தில் 4வது மனைவி பரபரப்பு புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடலூர் மாவட்டம் மேலூர் குப்பத்தைச் சேர்ந்தவர் காயத்திரி. இவருக்குக் கடந்த 2020ம் ஆண்டு அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சீனு என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்திற்காகப் பெண் வீட்டார் வரதட்சணையாக 6 சவரன் நகையும், வீட்டு உபயோகப் பொருட்களையும் வழங்கியுள்ளனர். ஆனால் கணவன் சீனு மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார்.

5 வது திருமணம்  செய்ய முயன்ற கணவன்..  காவல் நிலையத்தில் 4வது மனைவி பரபரப்பு புகார்!

இது பற்றி அறிந்த காயத்திரியின் பெற்றோர் மருமகன் சீனு நடவடிக்கை குறித்து விசாரணை செய்தபோது அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. சீனுவுக்கு ஏற்கனவே மூன்று பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது என்றும் நான்காவதாகக் காயத்திரியைத் திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது.

அதேபோல் நில தரகர் என்று கூறி திருமணம் செய்த கொண்ட சீனு தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்துவந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் ஐந்தாவதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காகவும் சீனு தயாராகி வந்துள்ளார்.

5 வது திருமணம்  செய்ய முயன்ற கணவன்..  காவல் நிலையத்தில் 4வது மனைவி பரபரப்பு புகார்!

இதையடுத்து மோசடி செய்து திருமணம் செய்த கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி காயத்தரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories