தமிழ்நாடு

இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகளால் பேசிய ஆசிரியர்.. போக்சோவில் சிறையில் அடைத்து போலிஸ் அதிரடி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளை கணித ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகளால் பேசிய ஆசிரியர்.. போக்சோவில் சிறையில் அடைத்து போலிஸ் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 270 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் 16 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் பணிபுரியும் கணித ஆசிரியர் தாமோதரன் என்பவர் இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகளால் பேசுவதாக கூறி பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு கூடி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் மற்றும் காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமையிலான ஏராளமான போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகளால் பேசிய ஆசிரியர்.. போக்சோவில் சிறையில் அடைத்து போலிஸ் அதிரடி!

மேலும் இந்தப் பிரச்சனை தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி மற்றும் கல்வி அதிகாரிகள் காவல்துறையினர் மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் நடத்திய விசாரணையின் முடிவில் பாலியல் விவகாரத்தில் சிக்கிய பள்ளி ஆசிரியர் தாமோதரன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி அறிவிப்பு.

மேலும் பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரின் சாத்தூர் தாலுகா போலிஸார் பள்ளி ஆசிரியர் தாமோதரனை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து தாலுகா காவல் நிலையத்தில் வைத்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories