தமிழ்நாடு

விஷ குளவி கொட்டியதால் நடந்த விபரீதம்.. முகம் வீங்கி முதியவர் பரிதாப பலி!

புதுச்சேரியில் விஷ குளவி கொட்டியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஷ குளவி கொட்டியதால் நடந்த விபரீதம்.. முகம் வீங்கி முதியவர் பரிதாப பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (67). இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாக அவர்கள் கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதியவர் ராமநாதன் வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு கூடுகட்டியிருந்த விஷ குளவிகள் திடீரென முதியவரை கொட்டியுள்ளது. இதில அவர் உடல் முழுவதும் வீங்கியுள்ளது.

விஷ குளவி கொட்டியதால் நடந்த விபரீதம்.. முகம் வீங்கி முதியவர் பரிதாப பலி!

மேலும் வலிதாங்க முடியாமல் அவர் அலறியுள்ளார். இவரின் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அவரை மீட்டு அருகே இருந்த ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் முதியவர் ராமநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

விஷ குளவி கொட்டியதால் நடந்த விபரீதம்.. முகம் வீங்கி முதியவர் பரிதாப பலி!

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ குளவி கொட்டியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

banner

Related Stories

Related Stories