தமிழ்நாடு

இளம் பெண் குத்தி கொலை.. வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: விசாரணையில் பகீர்!

திருச்சி அருகே இளம் பெண்ணை குத்தி கொலை செய்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம் பெண் குத்தி கொலை.. வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை:  விசாரணையில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது.

இந்நிலையில் இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் வினோத்குமார் எதிர்வீட்டில் வசித்து வருகிறார். இருவருக்குத் திருமணமாகி சீனிவாசன் என்ற கணவர் உள்ளார்.

இளம் பெண் குத்தி கொலை.. வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை:  விசாரணையில் பகீர்!

இதையடுத்து வினோத்குமார், புவனேஸ்வரி பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வினோத்குமார் திடீரென புவனேஸ்வரி வீட்டிற்குச் சென்று அவரை சரமாரியாகக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் வினோத்குமார் அருகில் உள்ள தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இளம் பெண் குத்தி கொலை.. வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை:  விசாரணையில் பகீர்!

இது குறித்து தகவல் அறிந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories