தமிழ்நாடு

“Accountல இருக்கற காசுல கைய வைக்க விடாதீங்க..” : வங்கிகளுக்கு போட்டி போட்டு கடிதம் அனுப்பிய EPS - OPS !

அ.தி.மு.க வரவு, செலவு கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

EPS & OPS
ANI EPS & OPS
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை பதவி உருவாக்கப்பட்டது.‌ தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைப்பாளராக, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒற்றைத் தலைமையின் கீழ் அ.தி.மு.க செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை உச்சத்தை எட்டியது. இதனால் இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் 24ம் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது, ஒ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜெ.சி.பி. பிரபாகரன் ஆகியோருக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் பின்னரே எந்த கட்சியிலும் நடக்காத உச்சபட்ச காட்சிகள் அங்கு நடந்தேறியது.

ADMK Party Symbol
ADMK Party Symbol

அதாவது, இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் என இரண்டு தரப்பு ஆதரவாளர்களாலும் முன்வைக்கப்பட்ட 23 தீர்மானங்கள் அங்கு நிறைவேற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட நிலையில், 23 தீர்மானங்களும் பொதுக்குழுவால் நிராகரிக்கப்பட்டதாக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.

மேலும் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னர் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனவும் அறிவித்தார். இதனிடையே ஒ.பி.எஸ் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழு என முழக்கமிட்டு பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர். இதன் காரணமாக அ.தி.மு.க பொதுகுழுவில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

பின்னர் தனது கடைசி முயற்சியாக, அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றால் கலவரம் வரலாம் என்பதால் அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என ஒ.பி.எஸ் ஆதரவாளர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையில் பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

“Accountல இருக்கற காசுல கைய வைக்க விடாதீங்க..” : வங்கிகளுக்கு போட்டி போட்டு கடிதம் அனுப்பிய EPS - OPS !

இந்நிலையில் நேற்று சென்னை வானகரம் அருகே அ.தி.மு.க பொதுக்குழு நடைபெற்றது. அதேவேளையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை பழனிசாமி தரப்பினர் பூட்டியதால், ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் தரப்பினர் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஒருவரை ஒருவர் கற்களை வீசித் தாக்குதல் நடத்திக்கொண்டனர்.

இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டதால் அந்த இடமே கலவரமாக மாறியது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் தடிதடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஒருபுறம் அலுவலகத்திற்கு வெளியே தொண்டர்கள் ரகளையில் ஈடுட்ட நேரத்தில், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அ.தி.மு.க தலைமை அலுவகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பன்னீர்செல்வம் அலுவகத்திற்குள் சென்று ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. மேலும் எடப்பாடி படம் இடம்பெற்ற பதாகையை கிழித்து, தீ வைத்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எரித்தனர்.

“Accountல இருக்கற காசுல கைய வைக்க விடாதீங்க..” : வங்கிகளுக்கு போட்டி போட்டு கடிதம் அனுப்பிய EPS - OPS !

இன்னொரு புறம் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்று மதன் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், ஜெ.சி.டி பிராபகர், பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் நீக்கீ சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து இது தொடர்பாக அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “அ.தி.மு.க சட்ட விதிகளின்படி தொண்டர்கள் என்னை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்தனர். என்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கும், கே.பி.முனுசாமிக்கும் அதிகாரம் இல்லை. அ.தி.மு.க விதிகளுக்கு புறம்பாக தன்னிச்சையாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமிக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவதாக அறிவிக்கிறேன். அ.தி.மு.க விதிகளின்படி தொண்டர்களுடன் இணைந்து நீதிமன்றத்திற்கு சென்று நீதியை பெறுவோம்” என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

இதனிடையே கலவரம் நடத்த அதிமுக அலுவகத்தை ராயபேட்டை வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் மற்றொரு சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“Accountல இருக்கற காசுல கைய வைக்க விடாதீங்க..” : வங்கிகளுக்கு போட்டி போட்டு கடிதம் அனுப்பிய EPS - OPS !

அதாவது, நேற்று அ.தி.மு.க சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் நியமிக்கப்பட்டனர். இதனிடையே அ.தி.மு.க-வின் புதிய பொருளாளர் நியமனம் தொடர்பாக கரூர் வைஸ்யா, இந்தியன் வங்கி மேலாளருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

அதில் அ.தி.மு.க-வின் வரவு செலவு கணக்குகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் எனவும் அ.தி.மு.க வரவு, செலவு கணக்குகளை தன்னை கேட்காமல் மேற்கொள்ள கூடாது எனனவும் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில்; இந்திய தேர்தல் ஆணைய சட்டப்படி இன்று வரை நானே பொருளாளர். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் என்னை கேட்காமல் எந்த வரவு - செலவு கணக்கையும் மேற்கொள்ள கூடாது. மீறி வரவு - செலவு கணக்கை மேற்கொண்டால் வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அ.தி.மு.க பொருளாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எழுதிய போட்டி கடிதத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் அதிமுக வங்கிக் கணக்குக்கு உரிமை கொண்டாடுவதால் யாரை அனுமதிப்பது என வங்கிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories