தமிழ்நாடு

முந்தி செல்ல முயன்ற சொகுசு பேருந்து.. லாரி மீது மோதியதில் 2 பேர் பலி.. அதிகாலையில் நடந்த கோர விபத்து !

தனியார் சொகுசு பேருந்து மீது லாரி மோதியதில், ஓட்டுநர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முந்தி செல்ல முயன்ற சொகுசு பேருந்து.. லாரி மீது மோதியதில் 2 பேர் பலி.. அதிகாலையில் நடந்த கோர விபத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்து பூ மாம்பாக்கம் என்ற பகுதி உள்ளது. இதன் அருகே உள்ள சென்னை - திருச்சி 4 வழி சாலையில், இன்று அதிகாலை லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த லாரிக்கு பின்னால், சென்னையில் இருந்து தேனிக்கு புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

முந்தி செல்ல முயன்ற சொகுசு பேருந்து.. லாரி மீது மோதியதில் 2 பேர் பலி.. அதிகாலையில் நடந்த கோர விபத்து !

இந்த நிலையில், லாரியை முந்தி செல்வதற்காக, அந்த தனியார் பேருந்து ஓட்டுநர் முயன்றுள்ளார். அப்போது லாரியின் இடது புறத்தில் தனியார் பேருந்து மோத, விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த இந்த தனியார் பேருந்து, விபத்துக்குள்ளான போது, அதிலிருந்த ஓட்டுநர் சிவா என்பவரும், மாற்று ஓட்டுநரான புலிக்குட்டி என்பவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எதுவும் ஆகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முந்தி செல்ல முயன்ற சொகுசு பேருந்து.. லாரி மீது மோதியதில் 2 பேர் பலி.. அதிகாலையில் நடந்த கோர விபத்து !

இதையடுத்து காலையில் நடைபெற்ற இந்த கோர சம்பவம் குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை காவல்துறையினர் விரைந்து வந்து இறந்த உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories