தமிழ்நாடு

24 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்.. காரணம் என்ன?

24வது மாடியில் இருந்து இளம் பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

24 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்.. காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செங்கல்பட்டு மாவட்டம், நாவலூர் அருக உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் அல்போன்ஸா. இவரது மகன் ஜெனிபர்.

இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் ஐடி கம்பெனி ஒன்றில் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் இவரின் வேலை பறிபோனதாக கூறப்படுகிறது. இதையடுத்து பல இடங்களில் வேலைத்தேடி அலைந்துள்ளார்.

24 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்.. காரணம் என்ன?

ஆனால், அவருக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் ஜெனிபர் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் தனது அடுக்குமாடி குடியிருப்பின் 24வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

24 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்.. காரணம் என்ன?

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

banner

Related Stories

Related Stories