தமிழ்நாடு

கணவருக்கு தெரியாமல் ரகசிய காதல்.. காதலன் - காதலி சேர்ந்ததால் களேபரம்.. வடிவேலு பட பாணியில் நடந்த சம்பவம்!

'மருதமலை' திரைப்படத்தில் இடம்பெறும் வடிவேலு காமெடி போல், ஒன்று சம்பவம் அரங்கேறியுள்ளது.

கணவருக்கு தெரியாமல் ரகசிய காதல்.. காதலன் - காதலி சேர்ந்ததால் களேபரம்.. வடிவேலு பட பாணியில் நடந்த சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்த அந்தோணி முத்து என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஞானதீபம் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். தொடர்ந்து ஞானதீபம் 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், கடந்த 15-ம் தேதி காணாமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனது மனைவியை காணவில்லை என்று கணவர் அந்தோணி முத்து, முத்தையாபுரம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். சில நாட்கள் முன்பு ஞானதீபம் கிடைத்து விட்டதாகவும், தாங்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கும் வருமாறும் அந்தோணி முத்துவை தொடர்பு கொண்ட காவல் ஆய்வாளர் ஜெயசீலன் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பதறியடித்து காவல்நிலையத்திற்கு சென்ற அந்தோணி முத்து அதிர்ச்சியடைந்தார்.

கணவருக்கு தெரியாமல் ரகசிய காதல்.. காதலன் - காதலி சேர்ந்ததால் களேபரம்.. வடிவேலு பட பாணியில் நடந்த சம்பவம்!

அந்தோணி முத்துவின் மனைவியான ஞானதீபம், தன்னுடன் ஏற்கனவே திருமணமான பிரதீப் என்பவரை அழைத்து வந்து தங்களை சேர்த்துவைக்கும்படி காவல் ஆய்வாளரிடம் முறையிட்டுள்ளார். மேலும் அவரது கர்ப்பத்துக்கும் பிரதீப் தான் காரணம் என்றும் தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ந்த கணவர் அந்தோணி முத்து, ஞானதீபத்துடன் பேச முற்பட்டார். மேலும் ஞானதீபத்தை பிரதீப்புடன் அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கணவருக்கு தெரியாமல் ரகசிய காதல்.. காதலன் - காதலி சேர்ந்ததால் களேபரம்.. வடிவேலு பட பாணியில் நடந்த சம்பவம்!

தொடர்ந்து, பிரதீப்பை மீட்டுத் தருமாறு அவரின் மனைவியான ஐஸ்வர்யா என்பவரும் புகாரளித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஐஸ்வர்யா, ஞானதீபத்துடன் ஏற்பட்ட தொடர்பால் தனது கணவன் பிரதீப், தன்னை விட்டு பிரிந்து அவருடன் சென்றதாகவும், தனக்கு அவர் வேண்டுமென்றும், அவரை மீட்டு தருமாறும் கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரதீப் மற்றும் ஞானதீபம் இருவரும் முறையாக விவகாரத்து பெறும் வரை தனித்தனியாக வாழவேண்டும் என்றும் விவகாரத்து பெற்ற பின்னர் முறைப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories