தமிழ்நாடு

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை: மகிளா நீதிமன்றம் அதிரடி!

தேனி அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை: மகிளா நீதிமன்றம் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில்சிக்கையன்பட்டியை சேர்ந்தவர் அகமது மீரான் (21). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 4 வயது சிறுமிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உத்தமபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளைஞர் அகமது மீரானை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தேனி மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.‌

அதில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 5,000 அபராதமும், அதை செலுத்தத் தவறினால் கூடுதலாக 1வருட மெய்க்காவல் சிறை தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி சாந்தி செழியன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக மாநில அரசு ரூபாய் 3லட்சம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories