தமிழ்நாடு

கல்லூரி முடிந்து வீடு திரும்பிய பேராசிரியர்.. கணவர் கண்முன்னே நடந்த கொடூரம்: காண்போரை கலங்கடித்த சம்பவம்!

சாலை விபத்தில் கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி முடிந்து வீடு திரும்பிய பேராசிரியர்.. கணவர் கண்முன்னே நடந்த கொடூரம்: காண்போரை கலங்கடித்த சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்ப சாமி நகரைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் சென்னையில் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி பூஜா. இவர் வில்லிவாக்கம் தாதன்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரி முடித்துவிட்டு மாலையில் தனது கணவருடன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது புழல் காவல் நிலையம் ஜி.என்.டி சாலை அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.

இதில் பேராசிரியை பூஜா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதைப்பார்த்த அவரது கணவர் கண்ணீர் விட்டு தகறி அழுதது காண்போரைக் கலங்கச் செய்தது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூஜா உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காகச் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்துகுறித்து வழக்குப்பதிவு செய்து சென்னை மணலியைச் சேர்ந்த லாரி டிரைவர் சக்திவேல் என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories