தமிழ்நாடு

ஊட்டி மலர் கண்காட்சி: பூத்துக்குலுங்கும் 1 லட்சம் மலர்கள்.. என்னென்ன பூக்கள் இடம் பெற்றுள்ளது தெரியுமா?

நீலகிரி மலர் கண்காட்சியை ராணுவ இசை முழுங்க மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஊட்டி மலர் கண்காட்சி: பூத்துக்குலுங்கும் 1 லட்சம் மலர்கள்.. என்னென்ன பூக்கள் இடம் பெற்றுள்ளது தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 124வது மலர் கண்காட்சி தொடங்கியது. இன்று தொடங்கிய மலர் கண்காட்சியை ராணுவ இசை முழுங்க மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து 1 லட்சம் கொய்மலர்களை கொண்டு 80 அடி நீளம் மற்றும் 20 அடி உயரத்திலான கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் முகப்பகுதியை வடிவமைக்கப்பட்டுள்ளதை கண்டு ரசித்த அவர் 124-வது மலர் கண்காட்சியை குறிக்கும் விதமாக 20 ஆயிரம் கொய்மலர்களை கொண்டு 124-பிளவர் ஷோ கேலரி, உதகை நகரம் உருவாகி 200 ஆண்டுகள் ஆவதை நினைவு கூறும் விதமாக 20 ஆயிரம் மலர்கள் மூலம் ஊட்டி 200 வடிவமும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வகை பழங்குடியினரை சுற்றுலா பயணிகள் பார்க்கும் விதமாக 20 ஆயிரம் மலர்களை கொண்டு பழங்குடியின தம்பதியினரின் உருவம் அமைக்கபட்டுள்ளது.

அதையும் தமிழக அரசின் மஞ்சபை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1,000 ரோஜாக்கள் மூலம் மஞ்ச பை மற்றும் 2 செல்பி ஸ்டேண்ட் என மொத்தம் 1 லட்சத்தி 70 ஆயிரம் பூக்களை கொண்டு மலர் சிற்பங்கள் காட்சிபடுத்தபட்டுள்ளன. அதையும் கண்டு ரசித்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யபட்ட ஆர்க்கிட் மற்றும் லில்லியம் மலர்கள் என 275 வகையான 35 ஆயிரம் மலர் தொட்டிகளும் அலங்கார மேடைகளில் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.

அதையும் ரசித்துச் என்ற நிலையில், மலர் கண்காட்சியை காண இன்று காலை முதல் பிற்பகல் வரை சுமார் 13,500 சுற்றுலாப் பயணிகள் இன்று பிற்பகல் ஒரு மணி வரை மலர் காட்சியை கண்டுகளித்துள்ளனர். இந்நிலையில் பழங்குடியினர் மக்கள் ஏராளமானோர் மலர் கண்காட்சியை காண இந்த ஆண்டு ஆர்வத்துடன் தாவரவியல் பூங்காவிற்கு வருகை தந்திருந்தனர்.

நேற்று தமிழக முதலமைச்சர் உதகைக்கு வருகை தந்தபோது, தோடர் பழங்குடியினர் மக்களுடன் சேர்ந்து நடனமாடியது தோடர் பழங்குடி இன மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி நிலையில், தங்களின் வாழ்வில் மறக்க முடியாத நினைவு நாளாக முதலமைச்சருடன் நடனமாடிய நாட்கள் இருந்ததாக தோடர் பழங்குடியின மக்கள் பெருமிதம் கொண்டனர். இன்று தொடங்கிய மலர் கண்காட்சி எதிர்வரும் 24ஆம் தேதி பரிசளிப்பு விழாவுடன் நிறைவு பெறுகிறது.

ஊட்டி மலர் கண்காட்சி: பூத்துக்குலுங்கும் 1 லட்சம் மலர்கள்.. என்னென்ன பூக்கள் இடம் பெற்றுள்ளது தெரியுமா?
ஊட்டி மலர் கண்காட்சி: பூத்துக்குலுங்கும் 1 லட்சம் மலர்கள்.. என்னென்ன பூக்கள் இடம் பெற்றுள்ளது தெரியுமா?
ஊட்டி மலர் கண்காட்சி: பூத்துக்குலுங்கும் 1 லட்சம் மலர்கள்.. என்னென்ன பூக்கள் இடம் பெற்றுள்ளது தெரியுமா?
ஊட்டி மலர் கண்காட்சி: பூத்துக்குலுங்கும் 1 லட்சம் மலர்கள்.. என்னென்ன பூக்கள் இடம் பெற்றுள்ளது தெரியுமா?
ஊட்டி மலர் கண்காட்சி: பூத்துக்குலுங்கும் 1 லட்சம் மலர்கள்.. என்னென்ன பூக்கள் இடம் பெற்றுள்ளது தெரியுமா?
banner

Related Stories

Related Stories