தமிழ்நாடு

”அடிமைகளை அடிக்கிறோம், மதவெறி ’கோமியம் கேங்கை’ ஓயாமல் அடிக்கிறோம்..” தயாராகும் DMK IT wing 2.0!

Keep Calm AND BelieveIn The WING என்ற பெயரில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.

”அடிமைகளை அடிக்கிறோம், மதவெறி ’கோமியம் கேங்கை’ ஓயாமல் அடிக்கிறோம்..”
தயாராகும் DMK IT wing 2.0!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் 2014ல் முதல் முறையாக தகவல்தொழில்நுட்ப பிரிவை முதன் முறையாகத் தொடங்கியது தி.மு.க. அதன் பிறகு தங்களது திராவிட கொள்கைகளைத் தினமும் தி.மு.க ஐ.டி விங் சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்று வருகிறது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய பிரச்சாரமாக தி.மு.க ஐடி விங் செயல்பட்டது. பிறகு தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகும் மக்களுக்காகக் கொண்டு வந்த திட்டங்களை மக்களுக்கு எளிய வழியில் அவர்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையில் தி.மு.க ஐடி விங் ஈடுபட்டு வருகிறது.

அதேநேரம், தி.மு.க அரசு மீது வேண்டும் என்ற அவதூறு மற்றும் பொய்யான செய்திகளை பரப்புவோர்களுக்கு ஆதாரங்களுடன் தி.மு.க ஐடி விங் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், தி.மு.க ஐ.டி விங் Keep Calm AND Believe In The WING என்ற பெயரில் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்ல உள்ளதாகத் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து டி.ஆர்.பி. ராஜா தனது ட்விட்டரில், பொய்களையும் வதந்திகளையும் நாள்தோறும் பரப்புவது எதிரிகளின் வேலை. அதனை முறியடிக்கும் வகையில் கழக ஆட்சியின் சாதனைகளையும் அதனால் மக்கள் பெறும் பயன்களையும் முன்னிறுத்துவது நம்முடைய கடமை. அதற்கேற்றவாறு, அணியின் கட்டமைப்புகள் மேலும் வலிமைப்படுத்தப்படுகின்றன.

கடந்த 3 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல்கள், சட்டமன்ற நிகழ்வுகள், தலைவர் பிறந்தநாள், முதல்வர் அயலக சுற்றுப்பயணம், பட்ஜெட் தொடர், நமது அரசின் முதலாமாண்டு சாதனைகள், இடை இடையில் எதிர் அணி கோமாளிகளின் பொய்கள் நிரம்பிய வாதங்களுக்கு மறுப்பு வீடியோக்கள் என எல்லோரும் அறிந்த பல விடயங்களையும் பலருக்கு தெரியாத பல அசைன்மென்ட்களையும் தகவல் தொழில்நுட்ப அணி செய்துவருகிறது.

"ஆதங்கத்தில்" நம்மில் சிலரும், "அரசியல் புரிதல் இல்லாத காரணத்தினால்" சிலரும், எழுப்பும் கேள்விகளுக்கும் இங்கே பதில் சொல்ல துவங்கினால் அது எதிரிக்கே ஆதாயம். அணியில் உள்ள பலரும், இல்லாத உடன்பிறப்புகள் பலரும், சிறப்பான அர்ப்பணிப்போடு செயல்பட்டு தலைவர் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிறப்பாக செயல்படுகிறார்கள். பொறுப்பிலிருந்தும் செயல்படாத சிலர் விடுவிக்கப்பட்டு புதியவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

நானும் நீங்களும் நினைக்கும் அளவிற்கு அணி செயல்படவேண்டும் என்றால் அது தற்போது இருக்கும் கட்டமைப்பில் செய்யகூடியதல்ல. ஆகவே தான் அணியின் வலிமை 10x அதிகரிக்கும் பணி கடந்த 2 1/2 மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை தாண்டி நான் எதுவும் வெளிப்படையாக சொல்ல இயலாது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்திய அரசியல் களம் எதிர்பார்க்கும் மாபெரும் தலைவராக நமது முதல்வர் இருக்கிறார். அவரது திராவிடமாடல் ஆட்சியை நோக்கி வரும் அவதூறுகளையும் பொய்களையும் பரப்புவோரை விட்டு வைக்க மாட்டோம். (இதற்கு நாகரீக அரசியல் சரிவராது என்பது எனது தனிப்பட்ட கருத்து)

எதிரி பொய்களையும் அவதூறுகளையும் பரப்பினால், அவனை அவனது பாணியிலேயே வெளுத்து வாங்குவது எப்படி என்பதை யாரும் நமக்கு கற்றுத் தர வேண்டியதில்லை.

அதே சமையம் கருத்தாயுதங்களும் பாயும்.அது வரை துப்பாக்கிய எதிரிபக்கம் திருப்புங்க பாஸு! இன்னும் ஒரு சில வாரங்களில் உதயமாகும் dmk it wing 2.0. எனது தனிப்பட்ட மற்றும் நமது அணியின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை. அடிமைகளை அடிக்கிறோம், மதவெறி "கோமியம் கேங்கை" ஓயாமல் அடிக்கிறோம் புதிய ஆயுதங்கள் பட்டறையில் So #KeepCalm AND #BelieveInTheWING. June3 முதல் உங்கள் அபிமான திரைகளில் DMKITwing 2.0 என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories