தமிழ்நாடு

சைபர் பண மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?.. மக்களை எச்சரிக்கும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

முன்பின் தெரியாமல் பேஸ்புக், வாட்ஸ் அப், டெலிகிராமி. பேசுபவர்களை நம்பி பணம் அனுப்ப கூடாது என பொதுமக்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சைபர் பண மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?.. மக்களை எச்சரிக்கும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்களிடம் அன்றாட டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்த நிலையில் நூதன மோசடிகளும் அதிகரித்தே வருகிறது. முன்பு ATM கார்டுகளின் எண்ணைக் கூறச் சொல்லி மோசடி செய்த வந்த கும்பல் தற்போது QR Code, KYC Update என்ற பெயரில் நூதன முறையில் பணத்திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மோசடிகளில் சிக்காமல் இருப்பது எப்படி என பொதுமக்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறிய எச்சரிக்கை வருமாறு:-

தொழில் நுட்பம் வளர்ந்து உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்ட இந்த சூழ்நிலையில் மொபைல் போனைமட்டும் கையில் வைத்து கொண்டு சைபர் குற்றங்கள் மூலம் பணம் மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருகிறது. OTP பெறுதல், QR Code அனுப்புதல், KYC Update என்ற பெயரில் லிங்க் அனுப்புதல் போன்ற மோசடிகளையும் தாண்டி, தற்போது நல்ல வேலையில் சம்பாதிக்கும் ஆண்களையும் மற்றும் ஓய்வு பெற்ற வயதான ஆண்களையும் குறிவைத்து ஏமாற்றத் துவங்கியுள்ளனர்சைபர் கிரைம் கிரிமினல்கள்.

பெண்கள் புகைப்படத்தை Profile Picture ஆக வைத்து கொண்டு பேஸ்புக் கிரிண்டர், மற்றும் பல சாட் ஆப்களில் முதலில் நண்பர்களாகி ஏமாற்றுகிறார்கள்.மெசென்ஜரில் பேசி வாட்சாப் எண்ணை வாங்கி, வாட்சப் - ல் பெண் குரலில் Voice Changer ஆப்களை பயன்படுத்தி மிக இனிமையாக பேசுவார்கள்.

வெளிநாட்டு பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி பெண் குரலில் பேசி, நம்ப வைத்து தான் இந்தியா வந்து முதலீடு செய்ய போவதாகவும் தெரிவிப்பார்கள். டெல்லி, மும்பை போன்ற விமான நிலையங்களின் வீடியோக்களை அனுப்பி இந்தியா வந்திறங்கியதாக நம்பவைப்பார்கள்.

பிறகு தான் கோடிக்கணக்கில் பவுண்ட்ஸ் (பிரிட்டிஸ் பணம்) கொண்டு வந்ததால் தன்னை கஸ்டம்ஸில் பிடித்து வைத்துள்ளார்கள் என்றும் தன்னை விடுவிக்க பணம் அனுப்புங்கள் என்று கூறுவார்கள். இதனை நம்பவைக்கும் பொருட்டு, போலியான Indian Customs Certificate மற்றும் பணக் கட்டுகளை கட்டி வைத்திருப்பது போன்றோ (அ) பணக்கட்டுகளை எண்ணுவது போன்றோ வீடியோ அனுப்புவார்கள்.

சைபர் பண மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?.. மக்களை எச்சரிக்கும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

முதலில் சிறிய அளவிலான தொகையை (ரூபாய் 1 லட்சத்திற்கு) அவர்கள் தரும் வங்கி கணக்கிற்கு அனுப்ப சொல்வார்கள். பின்னர் Customs Charge, Transition Charge, Late Fee Charge என்று பல்வேறு பெயரில் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப சொல்வார்கள். இதனை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை அனுப்பி ஏமாறுகிறார்கள்.

இதே போல் வெளிநாட்டு ஆண்கள் போல் பேசி Matrimony Website - களில் திருமணத்திற்காக பதிவு செய்யும் பெண்களை இந்த கும்பல் ஏமாற்றுகிறது. மேலும் வெளிநாட்டிலிருந்து பேசுவது போல் பேசி, பிசினஸ் செய்யலாம் என்று கூறி Animal vaccine oil, oil Seeds, Powder மருந்து தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யலாம் என்று கூறி பணம் பறிப்பார்கள்.

எனவே பொதுமக்கள், ஆண்களோ, பெண்களோ (அல்லது) நிறுவனமோ, வெளிநாட்டவர்கள் போல் சமூகவலைதளங்களிலோ, இமெயில்களிலோ தொடர்பு கொண்டு பேசும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வர்த்தகமோ, திருமணமோ தகுந்த நபர்களின் மூலம் விசாரித்து அறிய வேண்டும். அந்த நபர்களிடம் பேசும் போது அந்த வெளிநாட்டவர் பணம் அனுப்ப சொல்லி கேட்டால் உடனடியாக அவர்களது தொடர்பை துண்டித்து விடவேண்டும். பணம் எதுவும் அனுப்பகூடாது.

ஒருவேளை சிறிய அளவிலான பணம் ஏதேனும் அனுப்பி விட்டால், அந்த பணம் திரும்பி கிடைக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் பணம் எதுவும் அனுப்பகூடாது. நீங்கள் அனுப்பும் பணம் எதையும் உங்களுடன் பேசும் நபர்கள் திருப்பி தரப் போவதில்லை. எனவே முன்பின் தெரியாமல் பேஸ்புக், வாட்ஸ் அப், டெலிகிராமி. பேசுபவர்களை நம்பி பணம் அனுப்ப கூடாது.

இவ்வாறு காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories