தமிழ்நாடு

"தமிழ் மூதாட்டி அவ்வைக்கு" மணிமண்டபம்”.. பேரவையில் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள்!

தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

"தமிழ் மூதாட்டி அவ்வைக்கு" மணிமண்டபம்”.. பேரவையில் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாரம் நடைபெற்று வருகிறது. இந்று இந்து சமய அறநிலையத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல்வேறு முக்கிற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

"தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு நாகை மாவட்டம் துளசியாப்பட்டினத்தில் ரூ.1 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைத்து அவரது பாடல்கள் கல்வெட்டாக பதிக்கப்படும்.

1500 திருக்கோவில்களில் ரூ.1000 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். ஆண்டுதோறும் மயிலாப்பூர், நெல்லை, தஞ்சை, திருவண்ணாமலை ஆகிய கோயில்களில் மகாசிவராத்திரியன்று மாபெரும் விழா நடத்தப்படும்.

27 திருக்கோயில்களில் ரூ.80 கோடியில் புதிய திருமண மண்டபங்கள் அமைக்கப்படும். அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60% பங்குத்தொகை தரப்படும்.

தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்புக் கட்டணச்சீட்டுகள் அறிமுகம். ஒருகால பூஜை திட்டத்தில் நிதி வசதியற்ற மேலும் 2,000 கோயில்களுக்கு அரசு மானிய திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

ராமேஸ்வரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மூன்று திருக்கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும். தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் 2 கோடி மதிப்பீட்டில் திருப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் 2 கோடி மதிப்பீட்டில் திருப் பணிகள் மேற்கொள்ளப்படும். மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் க்கு சொந்தமான இடத்தில் எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம்." உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories