தமிழ்நாடு

தமிழில் பெயர்; தமிழக முதல்வர் பாணியை கையில் எடுத்த கவிப்பேரரசு.. பாவேந்தர் விழாவில் வைரமுத்து பேச்சு!

இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றோ, பொது மொழி என்றோ பொதுவெளியில் இனி யாரும் இந்த கருத்தை முன் வைக்கக் கூடாது என விரும்புகிறேன் என்று வைரமுத்து பேசியுள்ளார்.

தமிழில் பெயர்; தமிழக முதல்வர் பாணியை கையில் எடுத்த கவிப்பேரரசு.. பாவேந்தர் விழாவில் வைரமுத்து பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலூர்மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 132 ஆவது பிறந்த நாள் விழா வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழியக்க பொதுசெயலாளர் அப்துல்காதர், பொருளாளர் பதுமனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்றார்.

பின்னர் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேசுகையில், இந்தியை எதிர்க்கவும் தமிழை காக்கவும் பலர் உயிர் தியாகம் செய்தனர். அவர்களை வணங்குகிறோம். ஆனால் இவ்வளவு போராட்டம் செய்தும் நாம் மீண்டிருக்கிறோமா என்பது கேள்வி.

வட நாட்டு கலைஞர்கள் சிலர் இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று சொல்கிறார்கள். இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றோ, பொது மொழி என்றோ பொதுவெளியில் இனி யாரும் இந்த கருத்தை முன் வைக்கக் கூடாது என விரும்புகிறேன். இது பன்முகத்தன்மை கொண்ட, பல கலாச்சாரங்களை சேர்த்து தைக்கப்பட்ட தேசம்.

தமிழர்கள் தற்போது குழந்தைகளுக்கு பெயரை வட மொழியில் வைக்கின்றனர். பெயர் என்பது நமது அடையாளம், கலாச்சாரம். பெயர் என்பது வரலாற்று தொடர்ச்சி. தமிழில் குழந்தைகளுக்கு பெயரை சூட்டுங்கள் அதுதான் பாவேந்தருக்கு நாம் செய்யும் பெருமை என்று பேசினார்.

banner

Related Stories

Related Stories