தமிழ்நாடு

“கிணற்றில் நிர்வாணமாக கிடந்த 2வது மனைவியின் சடலம்”: விசாரணையில் பகீர் - சினிமாவை மிஞ்சும் கிரைம் சம்பவம்!

சொத்துக்காக உறவினர் பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“கிணற்றில் நிர்வாணமாக கிடந்த 2வது மனைவியின் சடலம்”: விசாரணையில் பகீர் - சினிமாவை மிஞ்சும் கிரைம் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே பகடப்பாடி தெருவைச் சேர்ந்தவர் அசோகன் (43). இவருக்கு விஜயா, செல்வராணி என இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லாததால், 16 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராணியை திருமணம் செய்துகொண்ட அசோகனுக்கு மகன் ஒருவர் உள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று கணவருக்கும் செல்வராணிக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இதனையடுத்து அன்று இரவே செல்வராணியை காணவில்லை என உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் கிடைக்காத நிலையில் மாயமானதாக போலிஸில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அசோகன் வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் பெண்ணின் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலிஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிர்வாணமாக கை, கால் கட்டப்பட்டு கிடந்த நிலையில் மிதந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

அப்போது அங்கு வந்த அசோகன் இது தனது இரண்டாவது மனைவி எனவும், முதலில் வந்து பார்த்தபோது சரியாக அடையாளம் தெரியவில்லை எனவும் போலிஸாரிடம் கூறியுள்ளார். மேலும் அசோகனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலிஸார் மரணம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதுதொடர்பாக 3 தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தேடி வந்த நிலையில், செல்வராணியின் செல்போன் அழைப்புகள் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், அசோகனின் சகோதரியின் கணவரின் மொபைல் எண்ணிலிருந்து அழைப்பு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே அசோகன் சகோதிரியின் கணவர் சிவராஜ் வெள்ளையூர் வி.ஏ.ஓவிடம் சரணடைந்தார். இதனையடுத்து போலிஸ், அவரை கைது செய்து விசாரித்ததில் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

எனது மனைவி குடும்பத்தில் உள்ள பூர்வீக சொத்தை, அவரது அண்ணன் அசோகன் தனது இரண்டு மனைவிகளுக்கு மட்டும் எழுதிவைத்துவிட்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த நிலையில் சம்பவத்தன்று செல்வராணி தனியாக வந்துகொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்து, நியாயம் கேட்டபோது, அவர் என்னை தரக்குறைவாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்து அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரது தலையில் தாக்கினேன். இதில் மயங்கி விழுந்த செல்வராணி பேச்சுமூச்சின்றிக் கிடந்தார்.

இதனால் அதிர்ச்சியில் இருந்த நான், அவரை யாரோ பாலியல் வன்கொடுமை செய்து கொன்று வீசியதுபோல் காண்பிப்பதற்காக, அவரது சேலை, ஜாக்கெட்டை கழற்றி நிர்வாணமாக்கி, கை, கால்களை கருங்கல்லால் கட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசிவிட்டுச் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். இதனிடையே போலிஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது சரணடைந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிவராஜ் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories